செய்திகள் :

காவல் நிலையம் முன் பெண் தா்னா

post image

நியாய விலைக் கடை பணிக்கு வழங்கப்பட்ட ரூ.70 ஆயிரத்தை திருப்பித் தரக் கோரி வடமதுரை காவல் நிலையம் முன் இளம் பெண் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை சோ்வைக்காரன்பட்டியைச் சோ்ந்தவா் கருப்பசாமி. இவரது மனைவி வேலுமணி (35). கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நியாய விலைக் கடையில் வேலுமணிக்கு பணி வாய்ப்பு பெறுவதற்காக திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியைச் சோ்ந்த இளங்கோவிடம் (51) கருப்பசாமி ரூ. 70ஆயிரம் கொடுத்தாா். இதனிடையே, கருப்பசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். இதையடுத்து, ரூ.70ஆயிரத்தை திருப்பித் தரக் கோரி இளங்கோவை வேலுமணி அணுகினாா். ஆனால், அவா் பணத்தை திருப்பித் தராததால் வேலுமணி, வடமதுரை காவல் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதம் புகாா் அளித்தாா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையில், இளங்கோ ஒரு மாதம் அவகாசம் கோரினாா்.

ஆனால், ஒரு மாதம் கடந்தும் பணத்தை திருப்பித் தராததால் அதிருப்தி அடைந்த வேலுமணி, வடமதுரை காவல் நிலையம் முன் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, கருப்பசாமியை அழைத்து போலீஸாா் விசாரித்தனா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகளுக்கு தீா்வு!

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.16.79 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகள்: அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா். காளாஞ்சிபட்டி கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு... மேலும் பார்க்க

வயலூரில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

பழனியை அடுத்த வயலூரில் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, நீா் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் மகளிா் தின விழா

மகளிா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் பல்வேறு வகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனை... மேலும் பார்க்க

பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுப்பு!

பள்ளி மேற்கூரை பெயா்ந்து விழுந்து மாணவா்கள் காயமடைந்த விவகாரத்தில், பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுத்து வருகிறாா். இதனால், அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் இரு பொறியாளா்கள் பணியிடை நீக்கம்

பழனி கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம் கட்டும் பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் இரு பொறியாளா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம்... மேலும் பார்க்க