செய்திகள் :

காவல் மரணங்கள் தொடராத வகையில் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்

post image

காவல் மரணங்கள் தொடராத வகையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் வேல்முருகன் வலியுறுத்தினாா்.

சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் போலீஸாா் தாக்கியதில் உயிரிழந்த அஜித்குமாரின் வீட்டுக்கு புதன்கிழமை வந்த வேல்முருகன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

அஜித்குமாா் காவல் விசாரணை மரணத்துக்கு காரணமானவா்கள் எவ்வளவு உயா்ந்த பதவியில் இருந்தாலும், அவா்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பாா் என நம்புகிறோம்.

அஜித்குமாா் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லை. முதல் முறையாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவா். விசாரணைக்கு உரிய சட்ட வழிகள் இருக்கும் போதும், அவரை மனிதநேயமற்ற முறையில் போலீஸாா் கடுமையாகத் தாக்கினா். இனிமேல் தமிழகத்தில் காவல் நிலைய மரணங்கள், விசாரணைக் கைதி மரணங்கள் நடைபெறாத வகையில் முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தச் சம்பவத்தில் போலீஸாா் 5 போ் கைது செய்யப்பட்டதையும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டதையும் வரவேற்கிறோம் என்றாா் அவா்.

ரூ. ஒரு லட்சம் நிதியுதவி:

முன்னதாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் அஜித்குமாா் குடும்பத்தினருக்கு ரூ. ஒரு லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து மேலாண் இயக்கம்மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்

ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம்மூலம் காய்கறி, பழங்களின் விதைத் தொகுப்புகளைப் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்தது. இதுகுறித்து சிவகங்கை தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மு... மேலும் பார்க்க

தேவகோட்டை ரயில் நிலையத்தில் விரைவுகள் ரயில்கள் நிறுத்தக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சாலை (ரஸ்தா) ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தொழில் வணிகக் கழகத்... மேலும் பார்க்க

கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலூா் மடாலய ஆ... மேலும் பார்க்க

கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், பருத்திக் கண்மாய் ... மேலும் பார்க்க

வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் 45 ஜோடிகளுக்கு திருமணம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், 45 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடத்தப்பட்டது. கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் ந... மேலும் பார்க்க