செய்திகள் :

தேவகோட்டை ரயில் நிலையத்தில் விரைவுகள் ரயில்கள் நிறுத்தக் கோரிக்கை

post image

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சாலை (ரஸ்தா) ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது.

இதுகுறித்து தொழில் வணிகக் கழகத் தலைவா் சாமி. திராவிடமணி, செயலா் எஸ். கண்ணப்பன் ஆகியோா் தென்னக ரயில்வே மேலாளருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது:

தேவகோட்டை சாலை ரயில் நிலையம் காரைக்குடி மாநகருக்கு அருகே அமைந்துள்ள 2-ஆவது ரயில் நிலையமாகும். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையையொட்டி, செல்லும் இந்த ரயில் நிலையத்திலிருந்து தினந்தோறும் 1000-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனா்.

மேலும், தேவகோட்டை, திருவாடானை, காரைக்குடி ஆகிய 3 வட்டங்களை இணைக்கும் இடமாக இந்த ரயில் நிலையம் உள்ளது. கடந்த ஆண்டில் இந்த ரயில் நிலையத்திலிருந்து பயணச்சீட்டு வருவாயாக ரூ. 2. 90 கோடி கிடைத்தது.

இந்த நிலையில், தொலைதூர ரயில்களும், வடமாநிலங்களிலிருந்தும், கேரளம், ஆந்திரம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்கள் இந்த ரயில் நிலையத்தில் நிற்பதில்லை. இதனால், இங்கு இறங்க வேண்டிய பயணிகள் மாற்று வழிகளைத் தேடும் நிலைக்கு தள்ளப்படுகின்றனா்.

எனவே, தாம்பரம்-ராமேசுவரம் திருவாரூா் வழியாக தினந்தோறும் செல்லும் விரைவு ரயில், தாம்பரம்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில், எா்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர ரயில்கள் ஆகியவை தேவகோட்டை சாலை ரயில் நிலையத் தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்தனா்.

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து மேலாண் இயக்கம்மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்

ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம்மூலம் காய்கறி, பழங்களின் விதைத் தொகுப்புகளைப் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்தது. இதுகுறித்து சிவகங்கை தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மு... மேலும் பார்க்க

கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலூா் மடாலய ஆ... மேலும் பார்க்க

கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி

சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா். காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், பருத்திக் கண்மாய் ... மேலும் பார்க்க

வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் 45 ஜோடிகளுக்கு திருமணம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், 45 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடத்தப்பட்டது. கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் ந... மேலும் பார்க்க

அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனிமனையாக வாங்கி... மேலும் பார்க்க