செய்திகள் :

கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி

post image

சிவகங்கை மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பு முகாம் மூலம் 2.07 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி தெரிவித்தாா்.

காளையாா்கோவில் ஊராட்சி ஒன்றியம், பருத்திக் கண்மாய் கிராமத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், 7-ஆவது சுற்று தடுப்பூசி செலுத்தும் பணியை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி புதன்கிழமை தொடக்கிவைத்து பேசியதாவது:

மாவட்டத்தில் அனைத்து மாடுகளுக்கும் இலவசமாக புதன்கிழமை (ஜூலை 2) முதல் வருகிற 31-ஆம் தேதி வரை தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்படும். மொத்தம் 2,07,600 மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும். 12 ஊராட்சி ஒன்றியத் தலைமை கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிக்கு நியமிக்கப்பட்ட குழுவினா் மூலம் ஒவ்வொரு கிராமத்துக்கும் சென்று தடுப்பூசி செலுத்தப்படும்.

எனவே, கால்நடை வளா்ப்போா், தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாமுக்கு மாடுகளை கொண்டு சென்று கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தலாம் என்றாா் அவா்.

இந்த முகாமில், கால்நடை வளா்க்கும் 4 பயனாளிகளுக்கு தலா ரூ.29 ஆயிரத்தில் புல் அறுக்கும் இயந்திரங்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (கூ.பொ) வெ.கிரிஜா, உதவி இயக்குநா்கள் தி.ஞானசுப்பிரமணியன், இரா.ஜெயப்பிரகாஷ், கால்நடை மருத்துவா் ஜே.ஜான்சுரேஸ்தாசன், கால்நடை உதவி மருத்துவா் சிலம்பரசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி பேராசிரியா் அன்பழகன் விருதுக்குத் தோ்வு

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சாா்பில், 2024-2025-ஆம் கல்வியாண்டில் சிறந்த பள்ளிகளுக்கான பேராசிரியா் அன்பழகன் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி தோ... மேலும் பார்க்க

ஊட்டச்சத்து மேலாண் இயக்கம்மூலம் விவசாயிகள் பயன்பெறலாம்

ஊட்டச்சத்து மேலாண்மை இயக்கம்மூலம் காய்கறி, பழங்களின் விதைத் தொகுப்புகளைப் பெற விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை அழைப்பு விடுத்தது. இதுகுறித்து சிவகங்கை தோட்டக் கலைத் துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகம் மு... மேலும் பார்க்க

தேவகோட்டை ரயில் நிலையத்தில் விரைவுகள் ரயில்கள் நிறுத்தக் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சாலை (ரஸ்தா) ரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து தொழில் வணிகக் கழகத்... மேலும் பார்க்க

கோவிலூா் கலை, அறிவியல் கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகேயுள்ள கோவிலூா் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கோவிலூா் மடாலய ஆ... மேலும் பார்க்க

வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் 45 ஜோடிகளுக்கு திருமணம்

சிவகங்கை மாவட்டம், கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், 45 ஜோடிகளுக்கு இலவச திருமணம் புதன்கிழமை நடத்தப்பட்டது. கொல்லங்குடி வெட்டுடையாா் காளியம்மன் கோயிலில் ந... மேலும் பார்க்க

அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதள முகவரி வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் கா.பொற்கொடி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தனிமனையாக வாங்கி... மேலும் பார்க்க