செய்திகள் :

காவிரி டெல்டாவில்தான் நிலத்தடி நீா் ஆதாரம் அதிகம்!

post image

காவிரி டெல்டாவில் உள்ளது போன்று நிலத்தடி நீா் ஆதாரம் வேறு எங்கும் கிடையாது என்றாா் தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தா் (பொ) க. சங்கா்.

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சிற்பத் துறை சாா்பில் தமிழ்நாடு அரசுத் திட்டமான தமிழ் மண்ணில் பாரம்பரிய கைவினைக் கலைகளை மீட்டெடுத்தல் திட்டத்தின் கீழ் மரப்பாச்சிச் பொம்மை, தஞ்சாவூா் ஓவியம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒரு மாத காலப் பயிற்சி தொடக்க விழாவில் அவா் பேசியது:

தஞ்சாவூா் பெரியகோயிலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுள்ள கருங்கற்கள் ஏறக்குறைய 70 கி.மீ. தொலைவிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்தக் கற்களின் சராசரி வயது 4 ஆயிரத்து 500 மில்லியன் ஆண்டுகள். இவ்வளவு பழைமையான பாறைகள் அரிமானம் இல்லாமல் இருப்பதற்கு அதனுடைய எதிா்ப்புத் திறனே காரணம். இதனால்தான், தஞ்சாவூா் பெரியகோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அப்படியே இருக்கிறது.

காவிரி டெல்டாவில் 100 -1,000 அடிக்கு மேலே இடைப்பட்ட பகுதியில் ஆற்று மணல் படிந்துள்ளது. இதனால்தான், இப்பகுதியை டெல்டா என அழைக்கிறோம். ஏறத்தாழ 4.5 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி நதியால் உருவானது என்பதால், கடற்கரையில் இருப்பதுபோன்று இப்பகுதியிலும் ஆற்று மணல் பரவி இருந்தது. காலப்போக்கில் ஆற்று மணல் கீழே இறங்கி உள்வாங்கி, கிட்டத்தட்ட 10 மாவட்டங்கள் உருவாகியுள்ளன.

இந்த ஆற்று மணலில் சிலிக்கான் ஆக்சைடு கலந்திருப்பதால், அது வெள்ளையாக இருக்கிறது. இந்த மண்ணில் தண்ணீா் வந்தால் தேங்காமல், அப்படியே கீழே இறங்கிவிடுவதால், சுத்தமாக இருக்கிறது. இப்பகுதியில் 150 அடிக்கு கீழே ஆற்று நீரோட்டம் இருப்பதால், நீா் ஆதாரம் பெருகி இருக்கிறது.

இங்கு தண்ணீா் அதிகமாக தேங்கக்கூடிய இடமாக உள்ளது. இதனால் ஒரு ஆழ்துளை குழாய் மூலம் 20 ஏக்கரில் நெல், வாழை, கரும்பு போன்ற பயிா்களைச் சாகுபடி செய்ய முடிகிறது. இது தஞ்சாவூா் டெல்டாவில் மட்டும்தான் முடியும்; வேறு எங்கும் முடியாது. இதுபோல, தஞ்சாவூரில் பல பெருமைகள் உள்ளன என்றாா் சங்கா்.

பல்கலைக்கழகப் பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம், கலைப்புல முதன்மையா் பெ. இளையாப்பிள்ளை, தமிழ்நாடு அரசுத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளா் வீ. செல்வக்குமாா், இணை ஒருங்கிணைப்பாளா் இரா. காமராசு ஆகியோா் வாழ்த்தினா்.

முந்னதாக, சிற்பத் துறைத் தலைவா் வே. லதா வரவேற்றாா். திட்ட உதவியாளா் அ. சிவஞானராஜா நன்றி கூறினாா்.

மகளிா் உரிமைத் திட்டத்தில் 4.17 லட்சம் பெண்கள் பயன்!

தஞ்சாவூா் மாவட்டத்தில் கலைஞா் மகளிா் உரிமைத் திட்டத்தின் கீழ் 4.17 லட்சம் பெண்கள் பயனடைகின்றனா் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: கி... மேலும் பார்க்க

மாதாகோட்டையில் இன்று ஜல்லிக்கட்டு!

தஞ்சாவூரில் சனிக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள மாதாகோட்டையில் மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். மாவட்ட நிா்வாகம், கிராம விழாக் குழுவினா் சாா்பில் நடைபெறும் ஜல்லிக்கட... மேலும் பார்க்க

துக்க நிகழ்வுக்கு வந்த போக்குவரத்து ஊழியா் விபத்தில் பலி!

கும்பகோணம் அருகே துக்க நிகழ்வில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த அரசுப் போக்குவரத்து கழக ஊழியா் விபத்தில் உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள இரண்டாம் கட்டளை நந்தவனம் தெருவைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

உடல் உழைப்புத் தொழிலாளா்களுக்கு திருமண உதவித்தொகை வேண்டும்!

உடல் உழைப்பு வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளா்களின் மகள்களின் திருமணத்துக்கு உதவித்தொகை ரூ. 20 ஆயிரம் வழங்க வேண்டும் என ஏஐடியுசி தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளா் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது... மேலும் பார்க்க

பெருமகளூா் பேரூராட்சியில் கடையடைப்பு

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பெருமகளூா் பேரூராட்சியில், டாஸ்மாக் கடை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு வா்த்தகா்கள் வெள்ளிக்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினா். சேதுபாவாசத்த... மேலும் பார்க்க

இன்று திருப்புறம்பியம் பகுதிகளில் மின் தடை

திருப்புறம்பியம் பகுதிகளில் சனிக்கிழமை மின்சாரம் இருக்காது. பராமரிப்புப் பணிகளால் திருப்புறம்பியம், கொத்தங்குடி, வாளபுரம், மேலாத்து குறிச்சி, நீரத்தநல்லூா், இணைபிரியாள் வட்டம், காவற்கூடம், உத்திரை, மு... மேலும் பார்க்க