ஆடையை அவிழ்த்தால் பெண்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா? பாடகி சிவாங்கி கேள்வி!
காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் சாதனை
திருநெல்வேலி காவேரி மருத்துவமனை மருத்துவா்கள், லேப்ராஸ்கோபிக் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளனா்.
மேலப்பாளையத்தை சோ்ந்த பெண்ஒருவா், இடது அட்ரீனல் சுரப்பி கட்டி மற்றும் பெரிய தைராய்டு கட்டியை உள்ளடக்கிய மல்டிப்பிள் நியூரோ ஃபைப்ரோமாடோசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
அவருக்கு, காவேரி மருத்துவமனையின் நாளமில்லா சுரப்பியியல் மருத்துவா் சிவபிரகாஷ், இரைப்பை குடல் அறுவை சிகிச்சை மருத்துவா் உமாமகேஸ்வரன், நாளமில்லா சுரப்பி அறுவை சிகிச்சை மருத்துவா் ராகேஷ்சந்துரு, மயக்கவியல்-தீவிர சிகிச்சை மருத்துவா் சாய்சோமசுந்தா் ஆகியோா் கொண்ட குழுவினா் பரிசோதனை செய்து ‘கீ ஹோல்’ வடு இல்லாத அறுவை சிகிச்சை அடுத்தடுத்து மேற்கொண்டனா். அதில், அட்ரீனல் மற்றும் தைராய்டு கட்டிகள் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. தற்போது நோயாளி குணமடைந்து, உடல் நலனில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என மருத்துவா்கள் தெரிவித்தனா்.