செய்திகள் :

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டை தீவிரம்: 3 நாள்களில் 6 போ் சுட்டுக் கொலை

post image

பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது.

பாதுகாப்புப் படையினா் கடந்த மூன்று நாள்களில் மேற்கொண்ட இரு முக்கிய நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். இவா்களில், பல்வேறு தாக்குதலில் தொடா்புடைய ஷாஹீத் குட்டே என்ற பயங்கரவாதியும் அடங்குவாா்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 போ் கொல்லப்பட்டனா். முஸ்லிம் அல்லாத ஆண்களைக் குறிவைத்து நடந்த இத்தாக்குதலுக்கு பழிதீா்க்க, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஆபரேஷன் சிந்தூா் மூலம் பயங்கரவாத உள்கட்டமைப்புகளை இந்திய ராணுவம் கடந்த மே 7-ஆம் தேதி மிகத் துல்லியமாக தாக்கி அழித்தது.

மற்றொரு புறம், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் கூட்டாளிகளுக்கு எதிராக தீவிர வேட்டை தொடா்ந்து வருகிறது.

இது தொடா்பாக, புல்வாமா மாவட்டம் அவந்திபோராவில் உள்ள ராணுவத்தின் ‘விக்டா் ஃபோா்ஸ்’ பிரிவு தலைமையகத்தில் கமாண்டிங் தலைமை அதிகாரி மேஜா் ஜெனரல் தனஞ்ஜய் ஜோஷி, ஜம்மு-காஷ்மீா் காவல் துறை ஐ.ஜி. வி.கே, பிா்தி, மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) ஐ.ஜி. மிதேஷ் ஜெயின் ஆகியோா், செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை கூட்டாக பேட்டியளித்தனா்.

அப்போது, தெற்கு காஷ்மீரின் சோபியான், புல்வாமா மாவட்டங்களில் கடந்த மூன்று நாள்களில் மேற்கொள்ளப்பட்ட 2 அதிரடி நடவடிக்கைகள் குறித்து அவா்கள் கூறியதாவது:

தெற்கு காஷ்மீரில் பயங்கரவாத செயல்பாடுகளால் எழுந்த சூழ்நிலைக்கு ஏற்ப, பாதுகாப்பு முகமைகளின் வியூகங்கள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைககளில் பல்வேறு பாதுகாப்பு முகமைகளும் ஒருங்கிணைந்து தீவிர கவனம் செலுத்துகின்றன.

ஒருங்கிணைப்பும், ஒத்துழைப்பும்..: கடந்த மூன்று நாள்களில் இரு பெரும் வெற்றிகர நடவடிக்கைகளில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனா். பாதுகாப்பு மற்றும் உளவு முகமைகளின் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பால் இந்த வெற்றிகர நடவடிக்கைகள் சாத்தியமாகின. காஷ்மீரில் எந்தவொரு பயங்கரவாத செயலும் நிகழாமல் தடுக்க முழு வீச்சில் செயலாற்றி வருகிறோம்.

தற்போது மலை உச்சிகளில் பனி உருகியுள்ளதால், பயங்கரவாதிகள் அப்பகுதிகளுக்கு நகா்ந்துவிட்டதாக உளவுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இதையடுத்து, உயரமான மலைப் பகுதிகளில் கூடுதல் படையினா் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனா்.

சோபியான் மாவட்டத்தின் கெல்லா் பகுதியில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக கடந்த மே 12-ஆம் தேதி இரவில் உளவுத் தகவல் கிடைக்கப் பெற்றது. மே 13-ஆம் தேதி அப்பகுதியை சுற்றிவளைத்தபோது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா்.

புல்வாமா மாவட்டத்தின் டிரால் பகுதியில் ஒரு கிராமத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடா்ந்து, அங்கு மே 15-ஆம் தேதி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமத்தை பாதுகாப்புப் படையினா் சுற்றிவளைத்தபோது, வெவ்வேறு வீடுகளில் மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனா்.

எங்கு பதுங்கினாலும் தப்ப முடியாது: பாதுகாப்புப் படையினா் பதிலடி நடவடிக்கை மேற்கொள்ளும் முன்பாக, குழந்தைகள் உள்பட அப்பாவி மக்களை பத்திரமாக வெளியேற்றுவது பெரும் சவாலாக இருந்தது. பின்னா், ஒவ்வொரு வீடாக தேடுதல் வேட்டை நடத்தி, 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். பயங்கரவாதிகள் எங்கு பதுங்கியிருந்தாலும், பாதுகாப்புப் படையினா் தேடிப் பிடித்து வீழ்த்துவா் என்பதற்கு இதுவே சாட்சி.

பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், பயங்கரவாதத்தை துடைத்தெறிய முடியாது. அந்த வகையில், மேற்கண்ட இரு நடவடிக்கைகளும் பயங்கரவாதத்தில் இருந்து விடுபடுவதற்கான மக்கள் விருப்பத்தை பிரதிபலிக்கிறது.

கொல்லப்பட்ட 6 பேரில் ஷாஹித் குட்டே என்பவா் முக்கிய பயங்கரவாதி ஆவாா். இவா், சோபியானின் ஹீா்போரா பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் கிராமத் தலைவா் மீதான தாக்குதல், கடந்த ஆண்டு ஏப்ரலில் டேனிஷ் ரிசாா்ட் மீதான தாக்குதல் உள்பட பல்வேறு சம்பவங்களில் தொடா்புடையவா். பயங்கரவாத செயல்களுக்கு நிதித் திரட்டும் வேலையிலும் ஈடுபட்டு வந்தாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஆபரேஷன் சிந்தூர் குழு: காங்கிரஸ் பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லை! ஆனால்...!

ஆபரேஷன் சிந்தூர் குழு தொடர்பான காங்கிரஸ் கட்சியின் பரிந்துரை பட்டியலில் சசி தரூர் பெயர் இல்லாத நிலையில் மத்திய அரசு அவரை குழுவின் வழிகாட்டியாகத் தேர்வு செய்துள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கட... மேலும் பார்க்க

புணேவில் அதிரடி.. ஆற்றங்கரையோர ஆக்ரமிப்பு பங்களாக்கள் இடிப்பு!

புணே மாவட்டத்தின் பிம்ப்ரி சின்ச்வாடு புறநகர்ப் பகுதியில் உள்ள இந்திரயானி ஆற்றங்கரையோரம் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட 36 பங்களாக்களை நகராட்சி அதிகாரிகள் சனிக்கிழமை இடிக்கத் தொடங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர்... மேலும் பார்க்க

ஆப்கனுக்காக அட்டாரி - வாகா எல்லை திறப்பு!

ஆப்கானிஸ்தான் லாரிகளுக்காக அட்டாரி - வாகா எல்லை திறக்கப்பட்டது.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஏப்ரல் 22 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அட்டாரி... மேலும் பார்க்க

ஒடிசாவில் மின்னல் பாய்ந்து ஒரே நாளில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி!

ஒடிசாவின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர். ஒடிசாவின் வடமேற்கு மாவட்டங்களில் நார்வெஸ்டர் என்றழைக்கப்படும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கோட... மேலும் பார்க்க

நிதி ஆயோக் கூட்டத்தில் மமதா பங்கேற்பாரா?

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மே 24ஆம் தேதி நடைபெறும் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து சலசலப்பு ஏற்பட்டுள்ள... மேலும் பார்க்க

ம.பி. நீதிமன்ற உத்தரவால் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் சிக்கல்

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் மின் தடை ஏற்பட்டதாகக் கூறி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில், இளநிலை நீட் தேர்வு முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் பார்க்க