செய்திகள் :

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் பலி!

post image

காஸா மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 70 பேர் உயிரிழந்துள்ளனர்.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2023 அக்டோபர் முதல் போர் நடந்து வருகிறது. இடையில் போர் நிறுத்தம் அவ்வப்போது அறிவிக்கப்பட்டாலும் போர் தொடர்ந்து வருகிறது.

நேற்று(புதன்கிழமை) காஸா மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதலில் 84 பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எனினும் காஸா சுகாதாரத் துறை 22 குழந்தைகள் உள்பட 70 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. ஜபாலியாவைச் சுற்றி கிட்டத்தட்ட 50 பேரும் தெற்கு நகரமான கான் யூனிஸில் 10 பேரும் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஹமாஸ் வசம் இருந்த இஸ்ரேல் - அமெரிக்க பிணைக் கைதி ஈடன் அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்ட சில மணி நேரங்களில் காஸா மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் போர்நிறுத்தம் தொடர்பாக மறைமுகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வருகின்றன.

ஹமாஸை அழிக்கும் வரை இஸ்ரேல் தாக்குதலை யாரும் நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | ஜம்மு-காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் துப்பாக்கிச் சண்டை!

அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கா? -டிரம்ப் அதிர்ச்சி தகவல்!

தோஹா: அமெரிக்க பொருள்களுக்கு இந்தியாவில் முழு வரி விலக்கு அளிக்க இந்தியா சம்மதித்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிர்ச்சி தகவலொன்றை இன்று(மே 15) தெரிவித்திருக்கிறார். கத்தார் சென்றுள்ள டி... மேலும் பார்க்க

லஷ்கர்-இ-தய்பாவின் சேதமடைந்த வசிப்பிடங்களில் சீரமைப்பு பணிகள்: பாகிஸ்தான் அரசு திட்டம்

இஸ்லாமாபாத்: ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலும் இந்திய படைகள் மேற்கொண்ட அதி துல்லியமான தாக்குதலில் அங்குள்ள 9 பகுதிகளில் அமைக்கப்பட்டிருந... மேலும் பார்க்க

பாகிஸ்தானுடன் எப்போதும் துணை நிற்போம் - துருக்கி அதிபர்

இஸ்தான்புல்: பாகிஸ்தானுடன் இன்பத்திலும் துன்பத்திலும் துணை நிற்போம் என்று துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்திருக்கிறார்.கடந்த சில நாள்களுக்கு முன்னர், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற... மேலும் பார்க்க

தாய்லாந்தில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபர் கைது!

தாய்லாந்து நாட்டில் அரிய வகை குரங்கு குட்டிகளைக் கடத்திய நபரை அந்நாட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சர்வதேச வனவிலங்கு கடத்தல் குழு தொடர்பான வழக்கில், அமெரிக்க மீன் வளம் மற்றும் வனவிலங்கு துறை அ... மேலும் பார்க்க

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் 3 பழங்குடியின எம்பி-க்கள் இடைநீக்கம்?

நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின எம்பி-க்கள் 3 பேரை இடைநீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொண்டு வரப்பட்ட மவோரி பழங்குடியி... மேலும் பார்க்க

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் முதல் இந்தியர்!

விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதல்முறையாக இந்தியர் ஒருவர் செல்கிறார்.அமெரிக்காவைச் சேர்ந்த ஆக்ஸியோம் ஸ்பேஸ் என்ற நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முயற்சியில் இந்திய விண்வெளி ... மேலும் பார்க்க