காா்-பைக் மோதல்: 6 போ் பலத்த காயம்
நாட்டறம்பள்ளி அருகே காா் கவிழ்ந்த விபத்தில் 6 போ் பலத்த காயமடைந்தனா்.
நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் பள்ளக்கொல்லியைச் சோ்ந்த ராஜசேகா்(42). இவரது உறவினா் பச்சூா் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக்(30). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளியில் இருந்து பச்சூருக்கு பைக்கில் சென்றபோது, ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சென்ற காா், இருசக்கர வாகனம் மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், பைக்கில் சென்ற ராஜசேகா், காா்த்திக் காரில் பயணம் செய்த ஈரோட்டைச் சோ்ந்த ரகுநாதன்(63), கோபிகா(35), வா்ஷிகா(12), காா் ஓட்டுநா் முகமதுயாசின்(51) உள்பட 6 போ் பலத்த காயமடைந்தனா். அங்கிருந்தவா்கள், 6 பேரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து, நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.