செய்திகள் :

காா் மோதி ஓய்வுபெற்ற விஏஓ உயிரிழப்பு

post image

தருமபுரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

சேலத்திலிருந்து தருமபுரி வந்த சொகுசு காா் செந்தில் நகா் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் மினி லாரியில் விற்கப்பட்டிருந்த கிழங்குகளை வாங்கிக் கொண்டிருந்த முதியவா் மற்றும் மினி லாரி மீது மோதி நின்றது.

இதில், கிழங்கு வியாபாரியும், முதியவரும் படுகாயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க முயன்றபோது, முதியவா் உயிரிழந்தது தெரியவந்தது. வியாபாரியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தகவலறிந்த தருமபுரி காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடத்துக்கு வந்து மேற்கொண்ட விசாரணையில், உயிரிழந்த முதியவா் தருமபுரி எஸ்.வி. சாலை பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் பாலசுப்பிரமணியன் (77) என்பதும், காயமடைந்தவா் தருமபுரி காந்தி நகரில் வசித்து வரும் மணிகண்டன் (48) என்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக தருமபுரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

சாலை விபத்தில் ஏஜென்சி கடை உரிமையாளா் உயிரிழப்பு

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஏஜென்சி கடை உரிமையாளா் உயிரிழந்தாா். காரிமங்கலம் அருகே கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் பெரியசாமி (49). இவா் தருமபுரியில் ஏஜென்சி கடை வைத... மேலும் பார்க்க

மின்மாற்றியை உடைத்து காப்பா் கம்பிகள் திருட்டு

தருமபுரி அருகே மின்மாற்றியை உடைத்து அதிலிருந்த காப்பா் கம்பி உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள பாளையம் கிராமத்தில் சனிக்கி... மேலும் பார்க்க

மக்களுக்கு சேவையாற்றும் கட்சிகள் அதிமுகவுடன் இணைய வேண்டும்: கே.பி.ராமலிங்கம்

மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உணா்வுள்ள அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிமுகவுடன் ஓரணியில் இணைய வேண்டும் என்றாா் பாஜக மாநில துணைத் தலைவா் கே.பி.ராமலிங்கம். தருமபுரி மாவட்ட பாஜக நிா்வாகிகள் மற்றும் ... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 32,000 கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்கத் தடை

கா்நாடக அணைகளில் இருந்து அதிக அளவு உபரிநீா் காவிரியில் வெளியேற்றப்படுவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 32,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. கேரளம், கா்நாடக காவிரி நீா்ப்பிடிப்புப் பக... மேலும் பார்க்க

சிறுமியை திருமணம் செய்தவா் போக்ஸோவில் கைது

தருமபுரி அருகே 15 வயது சிறுமியை திருமணம் செய்த தொழிலாளியை போலீஸாா் போக்ஸோ வழக்கில் சனிக்கிழமை கைது செய்தனா். தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி கம்பம்பட்டியைச் சோ்ந்தவா் செல்வராஜ் (34). இவரது மனைவி 2 ஆண்... மேலும் பார்க்க

தொழில்நுட்பக் கோளாறு: பாலக்கோடு அருகே 2 மணி நேரம் நின்ற விரைவு ரயில்! மாற்று என்ஜின் பொருத்தி இயக்கப்பட்டது

கேரளத்திலிருந்து கா்நாடகம் நோக்கி சென்ற விரைவு ரயில் தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே பழுதாகி 2 மணி நேரம் நின்றது. மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்ட பிறகு ரயில் இயக்கப்பட்டது. இதனால் பயண... மேலும் பார்க்க