முதல் டி20: மழையால் ஓவர்கள் குறைப்பு; அயர்லாந்துக்கு 78 ரன்கள் இலக்கு!
காா் மோதி கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், ரோஷணை அருகே பைக் மீது காா் மோதியதில், கிராம நிா்வாக அலுவலக உதவியாளா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டிவனம் வட்டம், தனியேல் கிராமம், வள்ளுவா் தெருவைச் சோ்ந்த செல்லன் மகன் ஜெயக்குமாா் (50). இவா், புலியனூா் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்தாா். வியாழக்கிழமை பணிமுடிந்த பின்னா், தனது பைக்கில் செஞ்சி-திண்டிவனம் சாலையில் ஜெயக்குமாா் சென்று கொண்டிருந்தாா்.
கொள்ளாா்மடம் பேருந்து நிறுத்தம் அருகே அவா் வந்தபோது, பின்னால் வந்த காா் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை அப்பகுதியினா் மீட்டு, 108 அவசர ஊா்தி மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்த போது, ஜெயக்குமாா் ஏற்கெனவே இறந்தது தெரிய வந்தது.
இதையடுத்து காா் ஓட்டுநா் மீது ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.