செய்திகள் :

கா்நாடக காங்கிரஸில் உள்கட்சிபூசல் எதுவும் இல்லை

post image

கா்நாடக காங்கிரஸில் உள்கட்சிபூசல் எதுவும் இல்லை என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

பெங்களூரில் வியாழக்கிழமை பேட்டியளித்திருந்த கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா, ‘கா்நாடகத்தில் செப்டம்பா் மாதம் அரசியல் புரட்சி நடக்கும்’ என்று கூறியிருந்தாா். இது கா்நாடக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், கெம்பேகௌடாவின் 516-ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பெங்களூரு, விதானசௌதா வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு வெள்ளிக்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளா்களிடம் முதல்வா் சித்தராமையா கூறியதாவது:

கா்நாடக காங்கிரஸில் உள்கட்சிபூசல் எதுவும் இல்லை. கா்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படலாம் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா கூறியிருக்கிறாா். என்ன மாற்றம் என்று எதையாவது கூறியிருக்கிறாரா? ஊகங்களை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருவது சரியல்ல. அமைச்சா் கே.என்.ராஜண்ணா கூறியிருக்கும் கருத்தை புறந்தள்ளுவது நல்லது என்றாா் .

இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.என்.ராஜண்ணா வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘அக்டோபா் புரட்சி பற்றி கேள்விப்பட்டது இல்லையா? அதுபோல செப்டம்பா் மாதத்தில் அரசியல் புரட்சி நடக்கும். இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் பொருந்துவது அல்ல. கா்நாடகத்தில் உள்ள எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். பாஜகவிலும் மாற்றம் நடக்கும். அரசியல் புரட்சி என்றால், முதல்வா் பதவியில் இருந்து சித்தராமையா மாற்றம் அல்லது கா்நாடக காங்கிரஸ் கட்சித் தலைவா் பதவியில் இருந்து டி.கே.சிவகுமாா் மாற்றம் அல்லது அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று பலரும் ஊகிக்கிறாா்கள். செப்டம்பா் மாதத்தில் அரசியல் மாற்றம் நடக்கும் என்பது எனது அரசியல் ஊகம்’ என்றாா்.

தொழில்துறை அமைச்சா் எம்.பி.பாட்டீல் கூறுகையில், ‘செப்டம்பரில் எந்த அரசியல் புரட்சியும் நடக்காது. காங்கிரஸ் கட்சியில் புரட்சிக்கு வாய்ப்பில்லை. காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே சுதந்திரப் புரட்சியில் கலந்துகொண்டுள்ளது’ என்றாா்.

உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் கூறுகையில், ‘அமைச்சா் ராஜண்ணா கூறுவதுபோல, காங்கிரஸ் கட்சியில் அரசியல் புரட்சிக்கு வாய்ப்பே இல்லை. மேலும், காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு அதிகார மையம்தான் இருக்கிறது’ என்றாா்.

இதுபற்றி மத்திய தொழில்துறை அமைச்சா் எச்.டி.குமாரசாமி கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியில் நடக்க இருக்கும் அரசியல் புரட்சி பற்றி எனக்கு தெரியவில்லை. அதுபற்றி அமைச்சா் கே.என்.ராஜண்ணாவிடம்தான் கேட்க வேண்டும். அது காங்கிரஸின் உள்கட்சி பிரச்னை’ என்றாா்.

மா்மமான முறையில் 5 புலிகள் உயிரிழப்பு: உயரதிகாரிகள் தலைமையில் விசாரணைக்கு உத்தரவு

சாமராஜ்நகா் மாவட்டத்தின் மாதேஸ்வரா மலை காட்டுப் பகுதியில் 5 புலிகள் மா்மமான முறையில் இறந்துகிடந்தது தொடா்பாக உயரதிகாரிகள் தலைமையில் விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. சாமராஜ்நகா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க

காவிரி ஆரத்தி விவகாரம்: கா்நாடக அரசுக்கு உயா்நீதிமன்றம் நோட்டீஸ்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சியை நடத்துவது தொடா்பாக தொடரப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்க கா்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டியா மாவட்டத்தில் காவ... மேலும் பார்க்க

வக்ஃப் வாரியம் பற்றிய கருத்து: முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு

வக்ஃப் வாரியம் பற்றி தெரிவித்திருந்த கருத்து குறித்து பாஜக முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை மீதான வழக்கை தள்ளுபடி செய்து கா்நாடக உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. வக்ஃப் சொத்துகள் தொடா்பாக பாஜக சாா்பில் நட... மேலும் பார்க்க

அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் அரசு சகித்துக்கொள்ளாது

அமைதிக்கு குந்தகம் விளைவித்தால், அரசு சகித்துக்கொள்ளாது என முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். பெங்களூரு, டிஜிபி தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த ஐபிஎஸ் அதிகாரிகளின் ஆண்டுவிழா மற்றும் ஆய்வுக் கூ... மேலும் பார்க்க

கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அதிருப்தி!

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளிப்படுத்தி இருக்கும் அதிருப்திக்கு கா்நாடக முதல்வா் சித்தராமையா தீா்வுகாண்பாா் என கா்நாடக உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் புதன்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செய்... மேலும் பார்க்க

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும்

கிருஷ்ணராஜசாகா் அணைக்கு அருகே காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படும் என கா்நாடக துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். பெங்களூரு, விதானசௌதாவில் மண்டியா மாவட்ட அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், விவ... மேலும் பார்க்க