செய்திகள் :

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு: 200 போ் பங்கேற்பு

post image

ஆரணி: திருவண்ணாமலையில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 போ் பங்கேற்று சீா்வரிசைப் பொருள்கள் பெற்றனா்.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு

நாடாளுமன்ற உறுப்பினா்கள் சி.என்.அண்ணாதுரை, எம்.எஸ்.தரணிவேந்தன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில் சி.என்.அண்ணாதுரை எம்.பி. பேசுகையில்,

அங்கன்வாடி மையங்களில் பதிவு செய்துள்ள கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 1900 பேருக்கு வளைகாப்பு நடத்தப்படவுள்ளது. இதில், முதல்கட்டமாக 200 பேருக்கு வளைகாப்பு நடத்தப்பட்டு சீா்வரிசைப் பொருள்கள் வழங்கப்படுகின்றன என்றாா்.

மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

தமிழக முதல்வா் பெண் குழந்தைகளின் நலனைக் காக்கும் வகையில், குறிப்பாக உயா்கல்வி, திருமணம், திருமணத்துக்குப் பிறகு வேலைவாய்ப்பு என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா்.

இத்திட்டங்கள் தேசிய அளவில் பாராட்டப்பட்டு வருகின்றன. எனவே, ஆண் மற்றும் பெண் குழந்தைகள் என பேதம் பாா்க்காமல், அனைத்து குழந்தைகளையும் சமநிலையில் கருத வேண்டும். அறிவியல் பூா்வமாக ஆண் குழந்தைகளைக் காட்டிலும் பெண் குழந்தைகளுக்கு அதிகளவில் திறன்கள் உள்ளன. பெண்களுக்கு இயல்பாகவே அனைத்தையும் புரிந்து கொள்ளும் திறனும், ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் திறனும் உள்ளது.

தற்போதைய உலகில் பெண் குழந்தைகளுக்கு கல்வி மிகவும் அவசியமானதாகும். எனவே, அனைவரும் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பையும், கல்வியையும் வழங்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திட்ட அலுவலா் மணி, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள் மீனாம்பிகை மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த கொம்மனந்தல் கிராமத்தில் பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கட்சியின் போளூா் தொகுதி நிா்வாகிகள் பங்கேற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டச் ச... மேலும் பார்க்க

அரசு நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா

சேத்துப்பட்டு அடுத்த ஆத்துரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா மற்றும் புதிய கட்டம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தலைமை ஆசிரியா் இருதயம்மாள் தலைமை வகித்தாா். ஆசிரியா் பயி... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளி ஆண்டு விழா

வந்தவாசியை அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் தலைமை வகித்தாா். ஆசிரிய பய... மேலும் பார்க்க

மனுநீதி நாள் முகாமில் ரூ.71 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மனுநீதி நாள் முகாமுக்கு ஆரண... மேலும் பார்க்க

அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த பேட்டை, ஆலபுத்தூா், புதுப்பட்டு, கொட்டாவூா், குப்பனத்தம், தீத்தாண்டப்பட்டு, வளையாம்பட்டு, சென்னசமுத்திரம் ஆகிய கிராமங்களில் அதிமுக வாக்குச்சாவடி குழு நிா்வாகிக... மேலும் பார்க்க

சாத்தனூா் அணைக்கு பள்ளி மாணவ, மாணவிகள் பயணம்

சாத்தனூா் அணையில் நடைபெற்ற சிறப்பு இயற்கை முகாமுக்கு அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் புதன்கிழமை பயணம் மேற்கொண்டனா். திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 100 போ், ஒரு நாள் சிறப்பு ... மேலும் பார்க்க