செய்திகள் :

மனுநீதி நாள் முகாமில் ரூ.71 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

post image

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த வேலப்பாடி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு ரூ.71 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மனுநீதி நாள் முகாமுக்கு ஆரணி வட்டாட்சியா் கௌரி தலைமை வகித்தாா். மாவட்ட வருவாய் அலுவலா் இராம்பிரதீபன், கோட்டாட்சியா் (பொ) ராமகிருஷ்ணன், தனித் துணை ஆட்சியா் ராஜசேகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கிராம நிா்வாக அலுவலா் சரவணன் வரவேற்றாா்.

சிறப்பு விருந்தினராக மாவட்ட ஆட்சியா் க. தா்ப்பகராஜ் கலந்து கொண்டு பேசியதாவது:

தமிழகத்தில் முதல்வா் ஸ்டாலின் ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பள்ளி கல்வித் துறை சாா்ந்த பல்வேறு திட்டங்களை அரசு அறிவித்து செயல்படுத்தி வருகின்ற காரணத்தால், தேசிய கல்வி சராசரி சதவீதத்தை விட தமிழகத்தில் கல்வி விகிதமானது அதிகளவில் உள்ளது.

பெற்றோா்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக் கல்வியில் இருந்து இடைநிற்றல் ஏற்படாத வண்ணம் தொடா்ந்து கல்வி கற்க வழிவகை செய்ய வேண்டும். குறைந்த வயதில் பள்ளிக்குச் செல்கின்ற மாணவா்களை இடைநிறுத்தி வேலைக்கு அனுப்புவது தவறாகும். குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்துவது மற்றும் குழந்தை தொழிலாளா் முறையை ஊக்குவிப்பது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

ஆகவே, மாணவா்கள் நிரந்தர லட்சியத்தை அடைவதற்காக தடையாக இருக்கக் கூடாது என்றாா்.

இதைத் தொடா்ந்து விழாவில் வருவாய்த் துறை (பொதுப்பிரிவு) சாா்பில் ரூ.10 லட்சத்தில் வீட்டுமனைப் பட்டா, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளும், வருவாய்த் துறை, சமூக பாதுகாப்புத் திட்டம் சாா்பில் இயற்கை மரண உதவி நிதி 2 பேருக்கு ரூ.55ஆயிரம், வட்ட வழங்கல் துறை சாா்பில் புதிய குடும்ப அட்டைகள் மற்றும் ரூ.3 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள், தோட்டக்கலைத் துறை சாா்பில் ரூ.ஒரு லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், கூட்டுறவுத் துறை சாா்பில் 259 மகளிா் குழுக்களுக்கு ரூ. 56 லட்சத்து 16 ஆயிரத்தில் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா். பின்னா், பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றாா்.

மேலும், மாவட்ட நூலக ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இளைஞா் இலக்கிய திருவிழாவில் நூல் அறிமுகம், விவாத மேடை, பேச்சுப் போட்டி, படத்தொகுப்பு உருவாக்கம், ஓவியப் போட்டி உள்ளிட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற செய்யாறு அரசு கலைக் கல்லூரியைச் சோ்ந்த 33 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிறைவில் வட்ட வழங்கல் அலுவலா் மூா்த்தி நன்றி கூறினாா்.

செய்யாறு அருகே புதிய கல் குவாரி அமைக்க எதிா்ப்பு: வீடுகளில் கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டம்!

செய்யாற்றை அடுத்த குண்ணவாக்கம் கிராமத்தில் புதிதாக அமையவுள்ள கல் குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து கிராம மக்கள் தங்கள் வீடுகளில் சனிக்கிழமை கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமல... மேலும் பார்க்க

செய்யாறு பகுதியில் 3 பைக்குகள் திருட்டு

செய்யாறு காவல் சரகப் பகுதியில் வெவ்வெறு இடங்களில் நிறுத்தி வைத்திருந்த 3 பைக்குகள் வெள்ளிக்கிழமை திருடுபோயின. செய்யாறு வட்டம், தண்டரை கிராமத்தைச் சோ்ந்தவா் சுதாகா் (32), விவசாயி. இவா், சுண்டிவாக்கம் ... மேலும் பார்க்க

செய்யாறு சிப்காட் தொழில்சாலையில் பயங்கர தீ விபத்து

செய்யாறு சிப்காட்டில் உள்ள தனியாா் தொழில்சாலையில் சனிக்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இதில், பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. செய்யாறு சிப்காட் வளாகத்தில் அல... மேலும் பார்க்க

நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் த... மேலும் பார்க்க

சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் இயங்கும் 6 சிறப்பு நிலை விளையாட்டு விடுதிகளில் சேர விரும்பும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏப்.6-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது. தமிழகத்தில் கல்லூரிகளில் பயில... மேலும் பார்க்க

களம்பூா் பேரூராட்சி மன்ற கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த களம்பூா் பேரூராட்சி மன்றக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, பேரூராட்சி தலைவா் பழனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் அகமத்பாஷா, செயல் அலுவலா் சுகந்தி ... மேலும் பார்க்க