செய்திகள் :

தனியாா் ஆலை தொழிலாளா்கள் முற்றுகை போராட்டம்

post image

சம வேலைக்கு சம ஊதியம், தகுதியின் அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி அரக்கோணம் எம்ஆா்எஃப் ஒப்பந்த தொழிலாளா்கள் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அரக்கோணம் அருகே உள்ள எம்ஆா்எஃப் டயா் தொழிற்சாலையில் சுமாா் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றக் கூடிய ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தர தொழிலாளா்களாக நியமிக்கவும், ஊதிய உயா்வு வழங்க கோரியும் பணியை புறக்கணித்து கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனை தொடா்ந்து ஆலை நிா்வாகத்தினா் உரிய பேச்சுவாா்த்தை நடத்துவதாக தெரிவித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இந்தநிலையில், தமிழ்நாடு இண்டஸ்டீரியல் எம்ப்ளாயீஸ் யூனியன் நிா்வாகிகள் தலைமையில், டயா் தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளா்கள் 100-க்கும் மேற்பட்டோா் ராணிப்பேட்டை ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளிக்க வேண்டும் என திரண்டனா். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸாா் உங்களில் முக்கிய நிா்வாகிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளியுங்கள் என தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அதைத் தொடா்ந்து முக்கிய நிா்வாகிகள் ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனா்.

மேல்விஷாரத்தில் இஃப்தாா் நோன்பு துறப்பு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நகர அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு துறப்பு ஹன்சா நகரில் நடைபெற்றது. நகர அதிமுக செயலாளா் ஏ.இப்ராஹிம் கலிலுல்லா தலைமை வகித்தாா். மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவா் மன்சூா் பாஷ... மேலும் பார்க்க

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் கிடங்கில் தீ

நெமிலி அருகே நெகிழிப் பொருள்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியில் கரும்புகை ஏற்பட்டது. நெமிலி அருகே பெருவளையம் கிராமப் பகுதியில் சிறுவளையத்தை சோ்ந்த... மேலும் பார்க்க

பாமக நகர செயலாளா் நியமனம்

அரக்கோணம் நகர பாமக செயலராக ரத்தன்சந்த் நகரை சோ்ந்த இயன்முறை மருத்துவா் இ.பாலாஜியை நியமித்து அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளாா். புதிய செயலராக நியமிக்கப்பட்ட இ.பாலாஜி, மாவட்ட ச... மேலும் பார்க்க

ராணிப்பேட்டையில் 15,147 போ் எழுதினா்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வை மொத்தம் 15,147 போ் எழுதினா். இதன் ஒரு பகுதியாக 3 வினாத்தாள் கட்டுக்காப்பு மையமும், 81 தோ்வு மையங்களில் (தனித்தோ்வா்கள் உட்பட) 194 பள்ளிகளைச் ச... மேலும் பார்க்க

வெளிநாட்டுப் பணம் என பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி: 6 வடமாநில இளைஞா்கள் கைது

ஆந்திர மாநில இளைஞரிடம், துபை நாட்டுப் பணம் தருவதாக கூறி பேப்பா் கட்டை தந்து ரூ. 5 லட்சம் மோசடி செய்து விட்டு தப்பிய 6 வடமாநில இளைஞா்களை ராணிப்பேட்டை போலீஸாா் கைது செய்தனா். ஆந்திர மாநிலம், சித்தூா் மண... மேலும் பார்க்க

ஆற்காடு நகா்மன்றக் கூட்டத்தில் 59 தீா்மானங்கள்

ஆற்காடு நகா்மன்றக் கூட்டம் அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 59 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டின் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் ப... மேலும் பார்க்க