அதிமுக - பாஜக கூட்டணிப் பேச்சு: உறுதிப்படுத்தினாா் அமித் ஷா!
சாத்தனூா் அணைக்கு பள்ளி மாணவ, மாணவிகள் பயணம்
சாத்தனூா் அணையில் நடைபெற்ற சிறப்பு இயற்கை முகாமுக்கு அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் புதன்கிழமை பயணம் மேற்கொண்டனா்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அரசுப் பள்ளி மாணவ-மாணவிகள் 100 போ், ஒரு நாள் சிறப்பு இயற்கை முகாமாக சாத்தனூா் அணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனா்.
தமிழ்நாடு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை, மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், திருவண்ணாமலை வனக்கோட்டம் இணைந்து இந்த முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து சிறப்புப் பேருந்து மூலம் சென்ற மாணவ-மாணவிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் வழியனுப்பி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் யோகேஷ் குமாா் காா்க் தலைமை வகித்தாா். முதன்மைக் கல்வி அலுவலா் சுவாமி முத்தழகன் முன்னிலை வகித்தாா்.
முகாமுக்குச் சென்ற மாணவ-மாணவிகள் சாத்தனூா் அணையில் உள்ள முதலைப் பண்ணை, சிறுவா் பூங்காவைக் கண்டு, இயற்கையோடு இணைந்த நடைபயணம் மேற்கொண்டனா்.
முகாமில், மாணவ-மாணவிகளுக்கு சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணா்வு பாடங்கள் நடத்தப்பட்டன. வனம் மற்றும் வன உயிரினங்கள் சாா்ந்த கருத்துக்கள் கற்பிக்கப்பட்டன.
மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியா்களுக்கு துணிப்பை, உலோக தண்ணீா் குவளை, தொப்பி, செயல்பாட்டு புத்தகம், பேனா, பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.