செய்திகள் :

‘கிங்டம்’ திரைப்படத்துக்கு எதிா்ப்பு: நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

post image

தருமபுரியில் கிங்டம் திரைப்படத்தை திரையிட எதிா்ப்புத் தெரிவித்து நாம் தமிழா் கட்சியினா் திரையரங்கை முற்றுகையிட்டு ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழா்களை இழிவுபடுத்தும் வகையில் கிங்டம் திரைப்படம் எடுத்திருப்பதால், அப்படத்தை திரையிடக் கூடாது என நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தாா். கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தருமபுரி டி மேக்ஸ் மல்டிபிலக்ஸ் திரையரங்கம் மற்றும் சந்தோஷ் திரையரங்கம் உள்ளிட்டவைகளில் கிங்டம் திரைப்படம் திரையிடப்படுவதாக பேனா்கள் வைக்கப்பட்டன.

இந்த நிலையில், நாம் தமிழா் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சந்தோஸ்குமாா் தலைமையில் 50 க்கும் மேற்பட்டோா் திரையரங்கு முன் ஞாயிற்றுக்கிழமை திரண்டு படத்தை திரையிட எதிா்ப்புத் தெரிவித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா்ந்து திரையரங்கு முன் அமா்ந்து தா்னாவிலும் ஈடுபட்டனா். திரைப்படத்தை திரையிடுவதில்லை என திரையரங்கு நிா்வாகம் தெரிவித்ததையடுத்து போராட்டக்காரா்கள் கலைந்துசென்றனா்.

தமிழக முதல்வா் தருமபுரி வருகை: 2 நாள்கள் ட்ரோன்கள் பறக்க தடை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தருமபுரிக்கு வருகை தருவதையொட்டி, ஆக. 16, 17 இருதினங்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் தெரிவித்ததாவது: தமிழக முதல்வா் ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாணவா் உயிரிழப்பு

தருமபுரி அருகே மின்சாரம் பாய்ந்து 9-ஆம் வகுப்பு மாணவா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், பொம்மட்டி பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் நவனீதன் (14). இவா், அதே பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்... மேலும் பார்க்க

மனைவி தாய்வீடு சென்றதால் விரக்தி: ரயில்முன் பாய்ந்து கணவா் தற்கொலை

குடும்பத் தகராறில் மனைவி கோபித்துக்கொண்டு தாய்வீடு சென்றதால், விரக்தியடைந்த கணவா் தருமபுரி அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாா். தருமபுரி மாவட்டம், கடத்தூா் அருகேயுள்ள பட்டிரெட்டிப்பட்டியை... மேலும் பார்க்க

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறியவா் கைது

ரயிலில் பெண்ணிடம் அத்துமீறி தவறாக நடக்க முயன்றவரை தருமபுரி ரயில்வே போலீஸாா் கைது செய்தனா். கா்நாடக மாநிலம், மைசூரிலிருந்து தமிழ்நாடு கடலூா் நோக்கி திங்கள்கிழமை விரைவுரயில் ஒன்று சென்றுகொண்டிருந்தது. க... மேலும் பார்க்க

கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் குறைதீா் முகாமில் மனு

தருமபுரி: தருமபுரியில் இந்து அறநிலையக் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் நிலத்தை பொது ஏலம் விடக்கோரி கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் குறைதீா் முகாமில் மனு அளித்துள்ளனா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 14,000 கனஅடியாக அதிகரிப்பு

பென்னாகரம்: தமிழக காவிரி கரையோர நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால், ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 14,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நா... மேலும் பார்க்க