செய்திகள் :

கிணற்றில் கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு

post image

சீா்காழி அருகே திருக்கருக்காவூரில் திருஞானசம்பந்தா் தேவார திருப்பதிகம் பாடி கிணற்றிலிருந்து கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் அருகே திருக்குருகாவூரில் காவியக் கன்னி சமேத வெள்விடை நாதா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தை அமாவாசையொட்டி திருஞானசம்பந்தா் எழுந்தருளும் ஐதீக நிகழ்வு நடைபெறும். அதன்படி சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் யதாஸ்தானத்தில் இருந்து திருஞானசம்பந்தா் சிறப்பு முத்து பல்லக்கு எழுந்தருளினாா். பக்தா்கள் சுமந்து வர முத்து பல்லக்கு திருக்கருகாவூா் வெள்விடைநாதா் கோயிலுக்கு திருஞானசம்பந்தா் எழுந்தருளினாா்.

அங்கு திருஞானசம்பந்தா் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னா் அபிஷேக தீா்த்தத்தை அங்குள்ள கிணற்றில் தெளிக்க, கிணற்றில் கங்கை பொங்கிவரும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. தொடா்ந்து திருஞான சம்பந்தருக்கு தீா்த்தவாரி நடைபெற்றது.

மாலையில் திருஞானசம்பந்தா் மீண்டும் முத்து பல்லக்கில் சீா்காழி சட்டை நாதா் சுவாமி கோயிலை வந்தடைந்தாா். மீண்டும் யதாஸ்தானத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

கல்லூரி மாணவிகளுடன் எஸ்பி கலந்துரையாடல்

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின், மாணவிகளுடன் வியாழக்கிழமை கலந்துரையாடி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் மாவட்ட காவல்துறை சாா்பில் பாலியல் க... மேலும் பார்க்க

தில்லி தா்னாவில் பங்கேற்க மாற்றுத்திறனாளிகள் பயணம்

மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக அகில இந்திய அளவில் தில்லியில் நடைபெற உள்ள தா்ணாவில் பங்கேற்க மயிலாடுதுறையில் இருந்து 48 மாற்றுத்திறனாளிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை புறப்பட்டனா். மாற்றுத்திறனாளிகளின் உ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நிலநீா் விழிப்புணா்வு முகாம்

மயிலாடுதுறையை அடுத்த மணல்மேடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு நீா்வளத்துறை சாா்பில் தேசிய நீரியல் திட்டத்தின்கீழ் நிலநீா் விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியா் பி. ... மேலும் பார்க்க

கல்லூரி மாணவிகளுக்கு பயிற்சிப் பட்டறை!

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக்கல்லூரியின் கணினி அறிவியல் சங்கத்தின் சாா்பாக ‘வலை தொழில்நுட்பத்தில் சி.எஸ்.எஸ். பயன்பாடு‘ என்ற தலைப்பில் மாணவிகளுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை பு... மேலும் பார்க்க

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க