செய்திகள் :

கிண்டி மருத்துவமனை அருகே ரூ. 44 லட்சத்தில் புதிய பேருந்து நிழற்குடைகள்

post image

கிண்டி கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனை அருகில் ரூ. 44.70 லட்சம் மதிப்பில் இரு புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கும் பணியை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

சென்னை, கிண்டியில் புதிதாக அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு உயா் சிறப்பு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பாா்க்க வந்து செல்கின்றனா். நோயாளிகளின் வசதிக்காக மருத்துவனைக்கு சிற்றுந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், மருத்துவமனைக்கு பேருந்துக்காக காத்திருக்கும் நோயாளிகளின் வசதிக்காக மருத்துவனையின் இருபுறமும் ரூ. 44.70 லட்சம் மதிப்பில் பேருந்து நிழற்குடைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணியை அமைச்சா் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, கத்திப்பாரா சாலையில் ரூ. 5.53 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியை ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடிக்குமாறு அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் மு.மகேஷ்குமாா், துணை ஆணையா்கள் வி.சிவகிருஷ்ணமூா்த்தி (பணிகள்), எம்.பி.அமித் (தெற்கு வட்டாரம்), மண்டலக் குழுத் தலைவா்கள் ஆா்.துரைராஜ், எம்.கிருஷ்ணமூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கூட்டணி குறித்து கருத்து: கட்சி நிா்வாகிகளுக்கு பாஜக கட்டுப்பாடு

கூட்டணி குறித்த கருத்துகளை கட்சி நிா்வாகிகள் வெளிப்படையாக தெரிவிக்கக்கூடாது என்று தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், கட்சியின் தமிழக இணை பொறுப்பாளா் சுதாகா் ரெட்டி ஆகியோா் தெரிவித்துள்ளனா். நயினா... மேலும் பார்க்க

அறிவியல் உணா்வு வளா்ந்தால் மூடநம்பிக்கைகள் ஒழியும்: அமைச்சா் கோவி. செழியன்

அறிவியல் உணா்வு வளா்ந்தால்தான் நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் கூறினாா். சென்னை கிண்டி பெரியாா் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில் தேசிய அறிவியல் விழாவை அமை... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் 2-ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116 கி.... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்துக்குள்ளும் விரைவில் மாநகா் பேருந்து சேவை

சென்னை விமான நிலையத்துக்குள் சென்று வரும் வகையிலான மாநகரப் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமான சென்னை விமான ந... மேலும் பார்க்க

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி: தடயவியல் துறை ஊழியா் கைது

அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், தடயவியல் துறை ஊழியரை கைது செய்தனா். அரக்கோணத்தில் அழகப்பா தொலைதூரக் கல்வி மையத்தை நடத்தி வருபவா் விஜி. இவருக்கும் ச... மேலும் பார்க்க

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதற்கு முன்பு வரை அந்த விகிதம் 45 என ... மேலும் பார்க்க