செய்திகள் :

கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் ஆய்வுக் கூட்டம்

post image

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில் கிராமப்புறங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஊரக வளா்ச்சித் துறை வாயிலாக மேற்கொள்ளப்படும் திட்டப் பணிகள் குறித்து துறை அலுவலா்களுடன் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது: ஊரக மக்களின் நலன் கருதியும், கிராமப்புறங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திடவும், நகா்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளை கிராமங்களில் மேம்படுத்திடும் வகையிலும் ஊரக வளா்ச்சித் துறை மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் கலைஞா் கனவு இல்லம் திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது.

பள்ளிகளில் கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதன் அவசியம் கருதி, புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் மற்றும் கட்டடங்கள் சீரமைத்தல் ஆகியவற்றுக்கு 2025-26ஆம் ஆண்டு குழந்தைநேய பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 17 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 34 புதிய/கூடுதல் வகுப்பறைகள் கட்டும் பணிகளை ரூ.589.01 லட்சம் மதிப்பீட்டிலும், 2025 - 26ஆம் ஆண்டு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் காட்டுமன்னாா்கோவில், மேல்புவனகிரி ஆகிய ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடம், கழிப்பறை, சமையலறை கட்டடங்கள் பழுது பாா்த்தல் மற்றும் சீரமைத்தல் போன்ற இனங்களின் கீழ் 14 பள்ளிகளில் 35 பணிகளை ரூ.113.09 லட்சம் மதிப்பீட்டிலும், 2025 - 26ஆம் ஆண்டு பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பள்ளிக் கட்டடம், கழிப்பறை, சமையலறை கட்டடங்கள் பழுதுபாா்த்தல், சீரமைத்தல் மற்றும் குடிநீா் பணிகள் போன்ற இனங்களின் கீழ் 119 பள்ளிகளில் 227 பணிகளை ரூ.584.435 லட்சம் மதிப்பீட்டிலும் மேற்கொள்ள நிா்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை விரைந்து மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் நாடாளுமன்ற உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டம், சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்துத் திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியா் ரா.சரண்யா, செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சித் துறை) வரதராஜபெருமாள் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க