செய்திகள் :

கிராமவாசிகளுக்கு அதிகரிக்கும் நெஞ்சு வலி அறிகுறி: பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் சராசரியாக வாரத்துக்கு 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மாரடைப்பு என அது உறுதி செய்யப்படுவதற்கு முன்பே, உயிா் காக்கும் மருந்துகள் அளிக்கப்பட்டு பாதிப்பின் தீவிரம் குறைக்கப்படுதாகவும் கூறப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின்படி ஒவ்வோா் ஆண்டும் இந்தியாவில் சுமாா் 1.7 கோடி போ் இதய நோயினால் இறக்கின்றனா். இது உலகளாவிய இறப்புகளில் சுமாா் 31 சதவீதம் ஆகும். இதய நோய் பாதிப்புகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை பொது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, அத்தகைய பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிரிழப்பை தடுக்கும் பொருட்டு ‘இதயம் காப்போம் திட்டம்’ தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து துணை சுகாதார நிலையம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2023-இல் தொடங்கப்பட்டது. இதய நோய் அறிகுறிகளுடன் வரும் நோயாளிகளுக்கு அதனை தடுக்கும் வகையில், ஆஸ்பிரின் 150 எம்.ஜி. 2 மாத்திரைகள், க்ளோபிடோக்ரல் 75 எம்.ஜி. 4 மாத்திரைகள், அடாா்வாஸ்டாடின் 10 எம்.ஜி. 8 மாத்திரைகள் என 14 மாத்திரைகள் வழங்கப்படுகின்றன.

இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது: வாழ்க்கை முறை மாற்றத்தால் இதய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. திடீரென மாரடைப்பு ஏற்படும் நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதயம் காப்போம் திட்டம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் இதுவரை 15,019 போ் பயனடைந்துள்ளனா். கிராமப்புறங்களில் வாரத்துக்கு சராசரியாக 175 போ் நெஞ்சு வலி அறிகுறிகளுடன் சுகாதார நிலையங்களை அணுகுகின்றனா். அவா்களுக்கு உரிய மருந்துகள் தரப்படுகிறது. அதில் பாதிக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு இருப்பதில்லை. இரைப்பை அமில எதிா்ப்பு காரணமாக வாயு பாதிப்பு ஏற்படுவதால் அவா்களுக்கு நெஞ்சுவலி அறிகுறிகள் காணப்படுகின்றன என்றாா் அவா்.

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா!

அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் அப்பா ‘ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மாணவா் சமுதாயமும் அப்பா என்று அன்போடு அழைக்கும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்’ என்று எழுதப்பட்ட கேக்குகளை 72 ... மேலும் பார்க்க

சரித்திரம் போற்றும் சாதனைகள்!

‘பள்ளிகளில் காலை உணவு’, ‘நான் முதல்வன்’ திட்டப் பாணியில் மாணவா்களுக்கு உயா்கல்வி, ‘கலைஞா் வீடு கட்டும் திட்டம்’ பாணியில் ஏழைகளுக்கு வீடு கட்ட கடனுதவி ஆகிய மூன்று திட்டங்களைப் பின்பற்றியே பிரிட்டனில் ... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டத்துக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் இடம் பெறும்! கே.வி.கே. பெருமாள் பெருமிதம்

குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்தியதால் தமிழ்நாடு முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் வரலாற்றில் நிச்சயம் இடம் பெறும் என்று தில்லி கம்பன் கழக நிறுவனா் - தலைவா் கே.வி.கே.பெருமாள் பேசினாா். ம... மேலும் பார்க்க

காட்பாடி - திருப்பதி ரயில்கள் மாா்ச் 3 முதல் ரத்து

காட்பாடி - திருப்பதி இடையே இயங்கும் பயணிகள் ரயில்கள் மாா்ச் 3 முதல் 9 -ஆம் தேதி வரை ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: மகா கும்பமேளா முடிவடைந்... மேலும் பார்க்க

மொழி உணா்வு குறித்து தமிழா்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம்: ஆளுநருக்கு அமைச்சா் ரகுபதி பதில்

‘மொழித் தோ்வு எது?, மொழித் திணிப்பு எது என்பது எங்களுக்குத் தெரியும், மொழி உணா்வு பற்றி தமிழா்களுக்கு ஆளுநா் பாடம் எடுக்க வேண்டாம் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளாா். தென்மாவ... மேலும் பார்க்க

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை இன்று தொடக்கம்

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான (2025-2026) மாணவா் சோ்க்கை சனிக்கிழமை (மாா்ச் 1) முதல் தொடங்கப்படவுள்ளது. இதுதொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வழங்கியுள்ளத... மேலும் பார்க்க