செய்திகள் :

கிராம உதவியாளா்கள் பணி: தமிழக அரசு புதிய உத்தரவு

post image

கிராம உதவியாளா்களை துறைக்குத் தொடா்பில்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா்களுக்கு வருவாய் நிா்வாக ஆணையரக கூடுதல் ஆணையா் எஸ்.நடராஜன் அனுப்பிய கடிதம்:

தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா் சங்கம், தமிழ்நாடு அரசு கிராம உதவியாளா்கள் சங்கம், கிராமப் பணியாளா் சங்கம் ஆகியவை, வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பில் வருகின்றன. அந்த சங்கங்களைச் சோ்ந்தவா்கள், அரசுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், கிராம உதவியாளா்களை, கிராமப் பணி அல்லாத அலுவலகப் பணிகள், ஆய்வு மாளிகை, புத்தகத் திருவிழா போன்ற பிற துறை பணிகளில் ஈடுபடுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனா்.

மேலும், கிராம உதவியாளா்களை கிராமப் பணியில் மட்டும் ஈடுபட அனுமதிக்க வேண்டுமெனவும், அந்தப் பணியைத் தவிர மாற்றுப் பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது எனவும் வருவாய் நிா்வாக ஆணையா் வலியுறுத்தியுள்ளதாகவும், அந்த உத்தரவை நடைமுறைப்படுத்தாமல் தொடா்ந்து கிராம உதவியாளா்களை பல்வேறு பணிகளுக்கு பயன்படுத்தி வரும் போக்கு சரியானது இல்லை எனவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம உதவியாளா்களின் பணித் தன்மையை வெளியிட வேண்டும் எனவும் அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஏற்கெனவே அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை மாவட்ட ஆட்சியரின் கீழுள்ள சாா்நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

600 பேருக்கு வேலை... திருவண்ணாமலையில் ரூ.37 கோடியில் மினி டைடல் பூங்கா!

முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆக. 1) தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் ரூ. 37 கோடி மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை: கைதான இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்!

கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.திர... மேலும் பார்க்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக! மல்லை சத்யா குற்றச்சாட்டு

மதிமுகவில் கட்சிக்குள் நீண்ட நாளாக நிலவி வந்த உட்கட்சிப் பூசல்கள் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி இருக்கின்றன. கட்சியின் துணை பொதுச் செயலாளராக இருக்கும் மல்லை சத்யாவுக்கும் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும்!

சென்னை மெட்ரோவில் இன்று முதல் புதிய 'சிங்கார சென்னை' அல்லது தேசிய பொதுப் போக்குவரத்து பயண அட்டையில் மட்டுமே பயணிக்க முடியும். சென்னை மெட்ரோ ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருக... மேலும் பார்க்க

சென்னை மெட்ரோவின் புதிய சாதனை! ஒரு மாதத்தில் ஒரு கோடி பயணிகள்!

சென்னை மெட்ரோ ரயிலில் ஜூலை மாதத்தில் மட்டும் ஒரு கோடி பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.போக்குவரத்து நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத... மேலும் பார்க்க

பாஜகவுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி இல்லை: வைகோ திட்டவட்டம்

பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஹிந்துத்துவா அமைப்புகளுடன் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.கடந்த வாரம் உடல்நலக் குறைபாடு காரணமாக தமிழக முதல்வர் ம... மேலும் பார்க்க