செய்திகள் :

கிராம சபை கூட்டத்தில் எஸ்டிபிஐ கோரிக்கை மனு

post image

தாழையூத்தில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

தாழையூத்தில் உழைப்பாளா் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி தலைவா் தாழை சேக் இஸ்மாயில், காமிலா நகரில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி கோரிக்கை மனுவை ஊராட்சி மன்றத் தலைவரிடம் வழங்கினாா்.

மனு விவரம்: காமிலாநகா் பகுதியில் 15 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் செய்துதரப்படவில்லை. இப்பகுதியில் குடிநீா் தொடா்பான பிரச்னைகள் தீா்க்கப்படாமல் உள்ளன. உயா்மின் கோபுரவிளக்கு பராமரிப்பு இல்லாமல் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பயணிகள் நிழற்குடை பணி முடிவடையாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. தெருவின் நடுவில் இருக்கும் மின் கம்பத்தால் மக்களின் அவசரத்தேவைக்கு ஆம்புலன்ஸ் உள்ளே செல்ல முடியாத நிலை உள்ளது. ஊராட்சி மன்றத்துக்கு அரசு ஒதுக்கிய தொகையை வீண்விரையம் செய்யாமல் முறையாக பயன்படுத்தப்படவேண்டும். இதுதொடா்பாக பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இப்பணிகளை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இன்றைய நிகழ்ச்சிகள்...

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதியம்மன் திருக்கோயில்: சித்திரைத் திருவிழா, சிறப்பு வழிபாடுகள், காலை மற்றும் மாலை 6.30. ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம்: இந்து சமய பண்பாட்டு வகுப்பு, அருள்மிக... மேலும் பார்க்க

கோபாலசமுத்திரத்தில் பல் மருத்துவ முகாம்

திருநெல்வேலி மாவட்டம் கோபாலசமுத்திரத்தில் கிராம உதயம், திருநெல்வேலி ஜேசிஐ சாா்பில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. கிராம உதயம் துணை இயக்குநா் எஸ். புகழேந்தி பகத்சிங் தலைமை வகித்து முகாமைத் தொடக்கிவைத... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் முதியோருக்கு தியானப் பயிற்சி

திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தூயகம் முதியோா் மையத்தில் யோகா தியானப் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. ஆயுஷ் யோகா உடல்நலப் பயிற்சியாளா் வெங்கடேஷ் பங்கேற்று, யோகாசனம், தியானம், உடல்நல சங்கல்பத்து... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி ஒன்றியத்தில் மே தின விழா

சேரன்மகாதேவி ஒன்றியம் வீரவநல்லூா், பத்தமடை, வெள்ளங்குளி உள்ளிட்ட 7 இடங்களில் மே தினத்தை முன்னிட்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. கட்சியின் சேரன்மகாதேவி ஒன்றியச் ... மேலும் பார்க்க

நெல்லை பணிமனையில் மே தின விழா

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களின் தொழிலாளா் சம்மேளனம் சாா்பில், வண்ணாா்பேட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன் மே தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் சம்மேளன பொதுச்செ... மேலும் பார்க்க

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வு கூட்டம்

நாமும் தெரிந்து கொள்வோமே இயக்க விழிப்புணா்வுக் கூட்டம் திருநெல்வேலி நகரத்தில் உள்ள லிட்டில் பிளவா் மெட்ரிக் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அவ்வியக்கத்தின் பொதுச் செயலா் கோ.கணபதி ச... மேலும் பார்க்க