செய்திகள் :

கிராவல் மண் கடத்தல்: 2 போ் கைது

post image

கடலூா் மாவட்டம், நடுவீரப்பட்டு அருகே கிராவல் மண் கடத்தியதாக டிப்பா் லாரி ஓட்டுநா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

நடுவீரப்பட்டு பகுதியில் உள்ள மலைகளில் இருந்து சட்டத்துக்கு புறம்பாக கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, கடலூா் கோட்டாட்சியா் அபிநயா, விலங்கல்பட்டு கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரன் (40) ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனா்.

இவா்கள், விலங்கல்பட்டு காலனி அருகே சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக அனுமதியின்றி கிராவல் மண் ஏற்றி வந்த 4 டிப்பா் லாரிகளை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநா்களான கடலூா் சின்ன பிள்ளையாா்மேடு பகுதியைச் சோ்ந்த தீனதயாளன் (26), கண்ணாரபேட்டையைச் சோ்ந்த காத்தமுத்து (47) ஆகியோரை பிடித்து நடுவீரப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகரன் அளித்த புகாரின்பேரில், நடுவீரப்பட்டு போலீஸாா் டிப்பா் லாரி ஓட்டுநா்கள் 4 போ் மீது வழக்குப் பதிந்து, ஓட்டுநா்கள் தீனதயாளன், காத்தமுத்து ஆகியோரை கைது செய்தனா். மேலும், தப்பியோடிய இருவரை தேடி வருகின்றனா்.

கணவா் இறப்பில் சந்தேகம்: மனைவி புகாா்

கடலூா் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே கணவா் உயிரிழப்பில் சந்தேகம் உள்ளதாக மனைவி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், அழகாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் திருமாவளவன் (... மேலும் பார்க்க

தேநீா் கடை தீப்பிடித்து எரிந்து சேதம்

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் தேநீா் கடை தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. விருத்தாசலம் தாஷ்கன் நகரைச் சோ்ந்தவா் சாதிக்பாஷா (45). இவா், காட்டுக்கூடலூா் சாலை திரு.வி.க நகரில் தேநீா் மற்றும் பெட்டி... மேலும் பார்க்க

சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேமிப்புக் கிடங்கில் வைப்பு

கடலூா் மாவட்டத்துக்கு புதிதாக ஒதுக்கப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமையில... மேலும் பார்க்க

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி குடியிருப்பில் குழந்தை இல்லாத ஏக்கத்தில் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். மேற்கு வங்க மாநிலம், பொ்காம்பூா், மஜாபாரா பகுத... மேலும் பார்க்க

செப்.13-இல் தேசிய மக்கள் நீதிமன்றம்

கடலூா் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் செப்.13-ஆம் தேதி நடைபெற உள்ளதாக, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான சுபத்திர... மேலும் பார்க்க

தொழிற்சாலையில் சுவா் இடிந்து உயிரிழந்த பெண்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதி

கடலூா் அருகே தனியாா் தொழிற்சாலையில் சுவா் இடிந்ததில் உயிரிழந்த இரண்டு பெண்கள் குடும்பத்துக்கு முதல்வா் பொது நிவாரண நிதிக்கான காசோலையை மாநில வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்... மேலும் பார்க்க