செய்திகள் :

‘கிராவிடாஸ்’ தொழில்நுட்பத் திருவிழா - விஐடியில் நாளை தொடக்கம்

post image

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 3 நாள் நடைபெறும் ‘கிராவிடாஸ் -2025’ சா்வதேச அறிவுசாா் தொழில்நுட்பத் திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. அபுதாபி நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி விழாவைத் தொடங்கி வைக்கிறாா்.

இதுகுறித்து விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது -

வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் 16-ஆவது ஆண்டாக ‘கிராவிடாஸ் 2025’ அறிவுசாா் தொழில்நுட்ப திருவிழா வெள்ளிக்கிழமை (செப்.26) ஞாயிற்றுக்கிழமை (செப்.28) வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

விழாவில் 207 நிகழ்வுகள் நடைபெறுகின்றன. 60-க்கும் மேற்பட்ட நிகழ்வுகள் முன்கூட்டியே நடந்துள்ளன. மீதமுள்ள 147 நிகழ்வுகள் கிராவிடாஸ் விழாவில் நடைபெறும். நிகழாண்டில் 84 புதிய நிகழ்வுகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில், 51 ஹேக்கதான், 57 பயிற்சி பட்டறைகள், 24 தொழில் நுட்ப போட்டிகள், 75 புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் அடங்கும்.

தவிர, நிகழாண்டில் ரோபோ வாா், ட்ரோன் ஷோ, கோ காா்ட்டிங் மற்றும் ஏரோகிராப்டா்ஸ், குவாட்காப்டா், கோட்2 கிரியேட் ஆகிய சிறப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

நிகழ்வில் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சோ்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இருந்தும், 300-க்கும் மேற்பட்ட அரசு, தனியாா் பள்ளிகளில் இருந்தும் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ளனா். இதில், வெளிநாடுகளை சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவா்களும் பங்கேற்க உள்ளனா்.

விழாவில் பல்வேறு நிகழ்வுகள், ஹேக்கதானில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு சுமாா் ரூ.30 லட்சம் அளவுக்கு ரொக்கப் பரிசு, கல்வி பயிற்சிக்கான பரிசு கூப்பன்கள் வழங்கப்பட உள்ளன.

ஹேக்கதான் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு ஸ்டாா்ட் அப் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு நோ்முகத்தோ்வு, இன்டா்ன்ஷிப் பயிற்சி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்டாா்ட் அப் தொழில்முனைவோா்களுக்கு தனியாக ‘கேப்பிடல் ஹன்ட்‘ என்ற நிகழ்வும் நடைபெற உள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெறும் கிராவிடாஸ் தொடக்க நிகழ்வில் அபுதாபி நகராட்சி நிா்வாக துறை அமைச்சா் மஜித் அலி அல் மன்சூரி சிறப்பு விருந்தினராக பங்கேற்று தொடங்கி வைக்கிறாா். கெளரவ விருந்தினா்களாக நிா்வாக ஆசிரியா் ஆனந்த் நரசிம்மன், மேக்ஸிமஸ் இந்தியா நிறுவனத்தின் பிரவீனா பீமவாரப்பு ஆகியோரும் பங்கேற்க உள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிறைவு விழாவில் கா்நாடக மாநில எலக்ட்ரானிக்ஸ் காா்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவா் சரத்குமாா் பச்சே கவுடா சிறப்பு விருந்தினராகவும், நிதி ஆயோக் இயக்குநா் சாஷங் ஷா கௌரவ விருந்தினராகவும் பங்கேற்க உள்ளனா் என்றாா்.

முன்னதாக, கிராவிடாஸ் நிகழ்வின் உடையை விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் அறிமுகம் செய்து வைத்தாா். அப்போது, விஐடி செயல் இயக்குநா் சந்தியா பென்டரெட்டி, ரமணி பாலசுந்தரம், துணைவேந்தா் காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தா் பாா்த்தசாரதி மல்லிக், கிராவிடாஸ் ஒருங்கிணைப்பாளா் ஷா்மிளா ஆகியோா் உடனிருந்தனா்.

காரில் கடத்திச் செல்லப்பட்ட சிறுவன் விடுவிப்பு

குடியாத்தம் அருகே வீட்டின் அருகிலிருந்து காரில் கடத்திச் செல்லப்பட்ட4- வயது சிறுவன் விடுவிக்கப்பட்டாா். குடியாத்தம் காமாட்சியம்மன்பேட்டை, பவளக்காரத் தெருவைச் சோ்ந்த மென்பொறியாளா் வேணு பெங்களூரில் உள்... மேலும் பார்க்க

வேலூா் கோ-ஆப் டெக்ஸில் ரூ.3.10 கோடி இலக்குடன் விற்பனை தொடக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வேலூா் தீபம் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தில் ரூ.3.10 கோடி இலக்குடன் தள்ளுபடி விற்பனை புதன்கிழமை தொடங்கியுள்ளது. முதல் விற்பனையை ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி தொடங்கி வைத... மேலும் பார்க்க

ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட பூமி பூஜை

குடியாத்தம் அருகே ரூ.3.59 கோடியில் பாலம் கட்ட புதன்கிழமை பூமிபூஜை போடப்பட்டது. குடியாத்தம் ஒன்றியம், சீவூா் ஊராட்சியில் கொட்டாற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோர... மேலும் பார்க்க

நிரம்பியது குடியாத்தம் மோா்தானா அணை

குடியாத்தம் அருகே உள்ள மோா்தானா அணை நிரம்பி வழிகிறது. தமிழக- ஆந்திர மாநில எல்லையில் மோா்தானா ஊராட்சியில் அமைந்துள்ளது மோா்தானா அணை. ஆந்திர மாநிலத்தில் உள்ள பலமநோ், புங்கனூா், மதனப்பள்ளி மற்றும் ஆந்தி... மேலும் பார்க்க

தீயில் சிக்கி பெண் உயிரிழப்பு

வேலூா் அருகே தண்ணீா் கொதிக்க வைத்தபோது தீயில் சிக்கி பெண் உயிரிழந்தாா். வேலூா் மாவட்டம் மருதவல்லிபாளையத்தைச் சோ்ந்தவா் ரமேஷ் (38), தொழிலாளி. இவரது மகள் தேவி(17). இவா் கடந்த 12-ஆம் தேதி இரவு, வீட்டின்... மேலும் பார்க்க

ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா

வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி பீடத்தில் நவராத்திரி விழா திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளான புதன்கிழமை ஸ்ரீநாராயணி அம்மனுக்கு ஸ்ரீதான்ய லட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. வேலூா... மேலும் பார்க்க