செய்திகள் :

கிரிக்கெட் ஜாம்பவான்களின் பாராட்டு மழையில் வைபவ் சூர்யவன்ஷி!

post image

ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ள 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இதையும் படிக்க: நிலத்தை விற்று கிரிக்கெட் பயிற்சி..! வைபவ் சூர்யவன்ஷியின் தந்தை கூறியதாவது?

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள் அடங்கும். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை யூசுப் பதான் தன்வசம் வைத்திருந்த நிலையில், அதனை தற்போது சூர்யவன்ஷி முறியடித்துள்ளார். யூசுப் பதான் 37 பந்துகளில் சதம் விளாசியிருந்த நிலையில், சூர்யவன்ஷி 35 பந்துகளில் சதம் விளாசி அவரது சாதனையை முறியடித்தார்.

பாராட்டு மழையில் சூர்யவன்ஷி

ஐபிஎல் தொடரில் அதிவேக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ள வைபவ் சூர்யவன்ஷியை கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் வெகுவாக பாராட்டியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

சச்சின் டெண்டுல்கர்

வைபவ் சூர்யவன்ஷி அச்சமின்றி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடினார். அவரது பேட்டின் வேகம், பந்தின் லென்த்தினை கணித்து சிறப்பாக விளையாடிய விதம் அவரது வெற்றியின் ரகசியம். கடைசியில் முடிவு 38 பந்துகளில் 101 ரன்கள். மிகவும் நன்றாக விளையாடினீர்கள் சூர்யவன்ஷி.

இதையும் படிக்க: சூரியவன்ஷி ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார்! - சிறுவயது பயிற்சியாளர்

யூசுப் பதான்

ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் விளாசிய இந்திய வீரர் என்ற என்னுடைய சாதனையை முறியடித்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு எனது வாழ்த்துகள். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிபோது, இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது அவரது சதத்தினை மேலும் சிறப்பானதாக மாற்றியுள்ளது.

யுவராஜ் சிங்

நீங்கள் 14 வயதில் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இந்த இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி உலகின் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடி சதம் விளாசியுள்ளார். வைபவ் சூர்யவன்ஷி - இந்த பெயரை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். துளியும் அச்சமற்ற அதிரடியான ஆட்டம். உங்களது அதிரடியான ஆட்டத்தைப் பார்த்து பெருமையாக இருக்கிறது.

சூர்யகுமார் யாதவ்

வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடியான ஆட்டத்தை என்னால் நம்பவே முடியவில்லை. முற்றிலும் அதிரடியான ஆட்டம்.

முகமது ஷமி

வைபவ் சூர்யவன்ஷி, என்ன ஒரு அசாத்திய திறமை கொண்ட இளம் வீரர். 14 வயதில் சதம் விளாசுவது நம்பமுடியாத விதமாக இருக்கிறது. தொடர்ந்து சிறப்பாக விளையாடுங்கள்.

மிதாலி ராஜ்

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டத்தினைப் பார்த்தபோது, வரலாறு படைக்கப்படுவதை பார்ப்பது போன்று உணர்ந்தேன். 14 வயதில் 200-க்கும் அதிகமான இலக்கை எடுக்கவேண்டிய போட்டியில் மிகுந்த நம்பிக்கையுடன் சிறப்பாக விளையாடினார். 35 பந்துகளில் அதிரடியாக சதம் விளாசி அசத்தினார். சிறப்பாக விளையாடினீர்கள்.

இயான் பிஷப்

வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் மிகவும் அற்புதமாக இருந்தது. இந்த இளம் வயதில் இப்படி ஒரு அதிரடியான ஆட்டத்தை நம்ப முடியவில்லை.

இதையும் படிக்க: இந்திய அணியின் விக்கெட் கீப்பருக்கு கே.எல்.ராகுல்தான் எனது முதல் தெரிவு: கெவின் பீட்டர்சன்

ஆரோன் ஃபின்ச்

இதுபோன்ற ஒரு ஆட்டத்தை இதற்கு முன்பாக நீங்கள் யாராவது பார்த்திருக்கிறீர்களா? என்ன ஒரு திறமையான வீரர்.

டெல்லியை வென்றது கொல்கத்தா

ஐபிஎல் போட்டியின் 48-ஆவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை அதன் சொந்த மண்ணில் செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் கொல்கத்தா 20 ஓவா்களி... மேலும் பார்க்க

தில்லி கேபிடல்ஸுக்கு 205 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தில்லி கேபி... மேலும் பார்க்க

கொல்கத்தாவுக்கு எதிராக தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.ஐபிஎல் தொடரில் தில்லியில் நடைபெறும் இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட... மேலும் பார்க்க

இந்திய கிரிக்கெட் இனி மாறிவிடும்; வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் குறித்து முன்னாள் இந்திய வீரர்!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா பேசியுள்ளார்.ஐபிஎல் தொடரில் ஜெய்பூரில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான்... மேலும் பார்க்க

வேலையை விட்ட தந்தை, 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் தாய்... சூர்யவன்ஷியின் முழுமையான பேட்டி!

ஐபிஎல் தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி போடிக்குப் பிறகு முதல் பந்தில் சிக்ஸர் அடிப்பது தனக்கு சாதாரணமானது எனக் கூறியுள்ளார். ஐபிஎல் போட்டியின் 47-ஆவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் 2... மேலும் பார்க்க

சூரியவன்ஷி ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார்! - சிறுவயது பயிற்சியாளர்

இளம் வீரர் சூரியவன்ஷி இன்னும் ஓரிரு ஆண்டுகளில் இந்திய அணிக்கு விளையாடுவார் என்று அவருடைய சிறுவயது பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடைபெற்ற ராஜஸ்தான் ர... மேலும் பார்க்க