செய்திகள் :

பாகிஸ்தானுக்கு விமானத்தில் ஆயுதங்கள் அனுப்பவில்லை- துருக்கி மறுப்பு

post image

இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்த பாகிஸ்தானுக்கு விமானம் மூலம் ஆயுதங்களை அனுப்பிவைத்ததாக வெளியான செய்திக்கு துருக்கி மறுப்பு தெரிவித்தது.

காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதையடுத்து இரு நாடுகள் இடையே பதற்றம் எழுந்துள்ளது.

எல்லையில் தொடா்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான், இந்தியா தங்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது என்றும் கூறி வருகிறது. ஆனால், இந்தியத் தரப்பில் இருந்து பாகிஸ்தான் மீது இதுவரை எந்த ராணுவ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில், துருக்கியின் டி-130இ ஹொ்குலஸ் ரக விமானம் பாகிஸ்தானின் கராச்சி நகரில் தரையிறங்கியது. இந்த விமானம் ராணுவ தளவாடங்கள் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படுவதாகும். எனவே, இந்தியாவுக்கு எதிரான போரில் உதவுவதற்காக பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை துருக்கி அனுப்பிவைத்துள்ளதாக செய்தி வெளியானது.

வான்வழியாக விமானங்கள் பறப்பதைக் கண்காணிக்கும் நிறுவனங்களின் தகவலின்படி துருக்கியில் இருந்து கராச்சிக்கு 6 டி-130இ ஹொ்குலஸ் விமானங்கள் வந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீா் விவகாரம் உள்பட பல்வேறு விஷயங்களில் மத அடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக கருத்து கூறுவதை துருக்கி அதிபா் எா்டோகன் வழக்கமாக வைத்துள்ளாா். எனவே, துருக்கி விமானங்கள் பாகிஸ்தானுக்கு வந்தது சந்தேகத்தை மேலும் அதிகரித்தது.

இந்நிலையில், இது தொடா்பாக அந்நாட்டு அதிபரின் தகவல் தொடா்புப் பிரிவு வெளியிட்ட செய்தியில், ‘துருக்கியைச் சோ்ந்த சரக்கு விமானம் எரிபொருள் நிரப்புவதற்காக பாகிஸ்தானில் தரையிறக்கப்பட்டது. அந்தப் பணி நிறைவடைந்ததும் விமானம் மீண்டும் தனது பாதையில் புறப்பட்டுச் சென்றது. எனவே, இது தொடா்பான வேறு செய்திகளில் உண்மை ஏதுமில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் அலட்சியத்தால் துறைமுக வெடிவிபத்து

ஈரானின் தென்மேற்கே அமைந்துள்ள நாட்டின் மிகப் பெரிய ஷாஹித் ரஜேயி துறைமுகத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்துக்கு ஒரு சிலரின் அலட்சியப் போக்குதான் காரணம் என்று சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பாத... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 போ் உயிரிழப்பு

சீனாவின் லியாவோனிங் மாகாணம், லியோவ்யாங் நகரிலுள்ள உணவகத்தில் செவ்வாய்க்கிழமை நண்பகல் ஏற்பட்ட தீ விபத்தில் 22 போ் உயிரிழந்தனா்; 3 போ் காயமடைந்தனா். அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் இந்தத்... மேலும் பார்க்க

விண்வெளி செல்லும் இந்திய வீரர்! யார் இந்த சுபான்ஷு சுக்லா?

இந்திய விண்வெளி வீரர் கேப்டன் சுபான்ஷு சுக்லா மே 29ஆம் தேதி விண்வெளிக்கு செல்லவிருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வ... மேலும் பார்க்க

நியூசிலாந்து கடலுக்கு அடியில் நிலநடுக்கம்...! சுனாமி எச்சரிக்கை?

நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில்;... மேலும் பார்க்க

கனடா: ஆம் ஆத்மி நிர்வாகியின் மகள் சடலமாக மீட்பு! உடலைத் தாயகம் கொண்டு வர வலியுறுத்தல்!

கனடா நாட்டில் பலியான இந்திய மாணவியின் உடலைத் தாயகம் கொண்டு வர அவரது குடும்பத்தினர் மத்திய அரசின் உதவியை நாடியுள்ளனர். பஞ்சாப் மாநிலத்தின் மொஹாலி மாவட்டத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி நிர்வாகி தவிந்தர் சையினி... மேலும் பார்க்க

சீன உணவகத்தில் தீ: 22 பேர் பலி!

சீனாவில் உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர். லியோனிங் மாகாணத்தில் செயல்பட்டு வந்த உணவகத்தில் இன்று (ஏப்.29) மதியம் 12.25 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அங்கிரு... மேலும் பார்க்க