செய்திகள் :

கீரை கட்டு மோசடி; போலி சான்றிதழ் தயாரிப்பு - ஓய்வு பெறும் நாளில் சுகாதார அலுவலர் சஸ்பெண்டு

post image

தென்காசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு வழங்க கீரை உள்ளிட்ட காய்கறிகள் ஒப்பந்தக்காரர்களால் பெறப்பட்டது. கடந்த 2022 – 2023-ம் ஆண்டு காலகட்டத்தில் 30 ரூபாய்க்குள் வாங்க வேண்டிய ஒரு கிலோ கீரையை, 80 ரூபாய்க்கு வாங்கியதாக பில்களில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.6,59,893 மோசடி செய்தது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டது.  தென்காசி சுகாதாரத்துறை இணை இயக்குநர் அலுவலகத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்த ஸ்ரீபத்மாவதி, இந்த மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஸ்ரீபத்மாவதி

இந்த நிலையில், தென்காசி அரசு மருத்துவமனையில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு பத்மாவதி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டர்  இந்த மாதம் அதாவது இன்று (31-5.2025) பணியில் இருந்து அவர் ஓய்வு பெறுவதாக இருந்தார். அவர் இதற்கு முன்பு பணியாற்றிய மருத்துவமனைகளில் எந்தவிதமான குற்றச்சாட்டும் இல்லை என்பதற்கான சான்றிதழை, அவர் பணியாற்றிய தென்காசி அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் தூத்துக்குடி மருத்துவமனை நிர்வாகம் கோரியுள்ளது.

இந்த நிலையில், தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனை நிர்வாகம் அவர் மீது ஒரு குற்றச்சாட்டு உள்ளதாகவும், அதாவது ஒரு கிலோ கீரை கட்டுவை ரூ.80-க்கு வாங்கி ஊழலில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு விசாரணையில் உள்ளது. அதனால் என்.ஓ.சி தர மறுத்துள்ளது. இதற்கான சான்றிதழை கொடுக்கப்பட்டுள்ளது.

தென்காசி அரசு மருத்துவமனை

இந்த சான்றிதழை தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி மாற்றம் செய்து தனது பணியில் எந்த விதமான பிரச்சினையும் இல்லை என்பது போல போலி சான்றிதழ் ஒன்றை தயாரித்து மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் சமர்ப்பணம் செய்துள்ளார். கீரைக்கட்டு ஊழலால்தான் பணியிட மாற்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வந்த நிலையில் சந்தேகம் அடைந்த மருத்துவக் கல்லூரி முதல்வர் இது தொடர்பாக தென்காசி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

அப்போது ”தாங்கள் கொடுத்த சான்றிதழ் இது இல்லை” எனக்கூறவே, அதிர்ச்சியடைந்த தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி முதல்வர் நிர்வாக அதிகாரியாக இருந்த பத்மாவதி திருவாரூர் மாவட்டத்திற்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், நேற்று (30-ம் தேதி)  அவரை பணியிடை நீக்கம் செய்து தமிழக சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஓய்விற்காக போலிச் சான்றிதழ் தயாரித்த பத்மாவதி கீரை ஊழல் வழக்கில் மட்டுமே சிக்கி இருந்தார்.

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி

தற்போது அவரது ஓய்விற்காக போலி சான்றிதழ் தயாரித்தது எப்படி அவருக்கு உதவியது யார் அவர் மேலும் என்னென்ன ஊழலில் ஈடுபட்டார் என விரிவான விசாரணை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினரும் தற்போது கோரிக்கை விடுத்துள்ளதுள்ளனர். இதே போல, லஞ்ச வழக்கு நிலுவையில் உள்ள தூத்துக்குடி துணை ஆட்சியர் ஜெயராணி என்பவரும் ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.   

சிதம்பரம்: மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை; வீடியோ எடுத்து மிரட்டிய அண்ணாமலை பல்கலை. பேராசிரியர் கைது

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மை கல்லூரியில் 27 வயதுடைய மாணவி ஒருவர், 2018-ல் முதுநிலை வேளாண்மை படித்து வந்தார்.அப்போது அதே துறையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வந்த 55 வயத... மேலும் பார்க்க

’அடகு நகையை மீட்டு விற்றால் கூடுதல் பணம் கிடைக்கும்’ - ரூ.20 லட்சம் பணத்தை சுருட்டிய நால்வர்

தென்காசி மாவட்டம், வடகரை பகுதியைச் சேர்ந்தவர் ஜிந்தாமதார். நகைக்கடை நடத்தி வருகிறார். இவர், இலத்தூர் காவல் நிலையத்தில், தன்னை ஒரு நபர் தொடர்பு கொண்டு நகை வாங்கித் தருவது போல் நடித்து தன்னுடைய பணம் ரூ.... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: காதலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் - ஆத்திரத்தில் சரமாரியாக குத்தி கொன்ற காதலன்

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். முதல் பெண் (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூ... மேலும் பார்க்க

தூத்துக்குடி: ஒருமணி நேரத்தில் நடந்த இரட்டைக்கொலை; முன் விரோதம் காரணமா? பழிக்குப்பழியா?

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி - கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று இரவு நின்று கொண்டிருந்த வள்ளுவர்நகரைச் சேர்ந்த பிரகதீஸ் என்பவரை மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டி செய்து விட்டு ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி: கொலை வழக்கில் கைதானவர்களிடம் 18 பவுன் நகை, 1.50 லட்சம் பணம் கையாடல்- உதவி ஆய்வாளர் கைது

கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ரத்தின சபாபதிபுரம் பகுதியில் ஒரு மனநல காப்பகம் செயல்பட்டு வந்தது. சூலூர் அருகே உள்ள கரவளி மாதப்பூர் பகுதியைச் சேர்ந்த வருண்காந்த் என்ற ஆட்டிசம் பாதிக்கப்பட்ட இளைஞர் இங்கு அன... மேலும் பார்க்க

Tiger: பைக்காரவை தொடர்ந்து முதுமலையில் இறந்து கிடந்த ஆண் புலி... தொடரும் சோகம்!

வங்கப் புலிகளின் வாழிடத்தில் உலக அளவில் மிக முக்கிய பகுதியாக நீலகிரி உயர்ச்சூழல் மண்டலம் விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் முதுமலை& சத்தியமங்கலம் , கேரளாவின் முத்தங்கா, கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய... மேலும் பார்க்க