கமலாலயத்தின் கருத்தைக் கூறும் எடப்பாடி பழனிசாமி! அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு
குஜராத்: "தினமும் 40 கிமீ சைக்கிள் ஓட்டுகிறேன்" - கார்கள் இருந்தும் சைக்கிளை விரும்பும் தொழிலதிபர்
குஜராத் மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே சைக்கிளைப் பயன்படுத்தி வருகிறார்.
குஜராத் மாநிலம் சூரத்தில் டெக்ஸ்டைல் மில்கள் வைத்திருப்பவர் சுரேஷ் ஜரிவாலா(70). இவர் தனது இளம் வயதில் சைக்கிளில் வேலைக்குச் சென்று வந்தார்.
இளம் வயதில் வேலைக்குச் சென்றபோது இரண்டு சைக்கிளைப் பயன்படுத்தி வந்தார். வீட்டிலிருந்து ரயில் நிலையத்திற்கு ஒரு சைக்கிளையும் பின்னர் ரயிலில் பயணம் செய்து, கம்பெனி இருக்கும் இடத்தில் இறங்கி அங்கிருந்து கம்பெனிக்கு இரண்டாவது சைக்கிளையும் பயன்படுத்தி வந்தார்.

இது குறித்து சுரேஷ் ஜரிவாலா கூறுகையில், ''1990ம் ஆண்டு அட்லஸ் சைக்கிள் எனது வாழ்க்கையில் வந்தது. அப்போது ரூ.2000க்கு வாங்கினேன். அந்த சைக்கிளைத்தான் இப்போதும் ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
இந்த சைக்கிள் என்னுள் ஒன்றாக இருக்கிறது. எனவேதான் இப்போதும் அதனை எனது ஆத்ம திருப்திக்காக ஓட்டிக்கொண்டிருக்கிறேன்.
தினமும் காலை 40 கிலோ மீட்டர் தூரத்திற்குச் சைக்கிள் ஓட்டுகிறேன்''என்று குறிப்பிட்டார்.
இவர் தேநீர் குடிக்கும் முன்பு சைக்கிள் ஓட்டி முடித்துவிடுகிறார். ஒவ்வொரு ஆண்டும் சைக்கிளில் ஒரு முறை மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடிக்குச் சென்று வருகிறார். அதாவது ஷீரடி சென்று வர 600 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுகிறார். தினமும் 10 ஆயிரம் படிக்கட்டுகள் நடக்கிறார். மேலும் மராத்தான் போட்டியிலும் பங்கேற்கிறார்.
சுரேஷ் ஜரிவாலாவுடன் கூடப் பிறந்தவர்கள் நான்கு பேர் இருக்கின்றனர். அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இருக்கின்றனர்.
சுரேஷ் ஜரிவாலாவிடம் பல கார்கள், எலக்ட்ரிக் சைக்கிள்கள் இருக்கின்றன. அப்படி இருந்தும் காலையில் சைக்கிளை ஒரு நாளும் ஓட்டாமல் இருந்தது கிடையாது.