செய்திகள் :

குஜராத்: பாலம் இடிந்து விழுந்ததில் 15 ஆக உயர்ந்த பலி!

post image

குஜராத்தின் வதோதராவில் 40 ஆண்டுகள் பழைமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா கூறுகையில்,

இந்த நிலையில், பாலம் இடிந்து விழுந்ததில் மேலும் நால்வரின் உடல்கள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பால விபத்தில் மேலும் மூவர் காணவில்லை.

சம்பவ இடத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படை (என்டிஆர்எஃப்) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை (எஸ்டிஆர்ஃஎப்) குழுக்கள் ஆற்றின் கீழ்ப்பகுதியில் 4 கிலோ மீட்டர் வரை மாயமானவர்களின் உடல்களைத் தேடி வருகின்றது.

பட்டியலின்படி, இதுவரை 15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், மாயமான மூவரைத் தேடி வருகின்றனர். காணாமல் போன மற்ற நபர்கள் குறித்து கட்டுப்பாட்டு அறையை அழைத்துத் தெரிவிக்கலாம் என்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

மழை மற்றும் ஆற்றில் அதிகப்படியான சேறு இருப்பதால் மீட்புப் பணி சவாலான பணியாக மாறியுள்ளது. இந்த சூழ்நிலையில் எந்த இயந்திரமும் வேலை செய்யவில்லை என்று அவர் கூறினார்.

ஆற்றில் மீட்கப்பட்ட ஒன்பது பேரில் ஐந்து பேர் காயமடைந்து வதோதராவில் உள்ள எஸ்எஸ்ஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் காவல் கண்காணிப்பாளர் ரோஹன் ஆனந்த் முன்னதாக தெரிவித்தார், காயமடைந்தவர்களில் யாரின் நிலைமையும் கவலைக்கிடமாக இல்லை என்று அவர் கூறினார்.

நடந்தது என்ன?

குஜராத்தின் வதோதரா, ஆனந்த் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 23 உயரமான தூண்களுடன் 900 மீட்டர் நீள பாலம் அமைந்துள்ளது. 1985-ஆம் ஆண்டில் மக்களின் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட்ட இப்பாலம் மத்திய குஜராத் மற்றும் சௌராஷ்டிரா பகுதிக்கு இணைப்பை வழங்கி வந்தது. இந்தப் பாலத்தின் இரண்டு தூண்டுகளுக்கு இடைப்பட்ட 15 மீட்டர் நீளமுள்ள பகுதி புதன்கிழமை காலை 7.30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்தது.

அப்போது பாலத்தின் வழியாகச் சென்றுகொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு இருசக்கர வாகனம் ஆகிய வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். சிலர் மாயமாகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

The death toll in the collapse of a bridge over the Mahisagar river in Gujarat's Vadodara district has gone up to 15 with the recovery of four more bodies, officials said on Thursday.

தமிழ்நாட்டில் வென்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும்: அமித் ஷா அறிவிப்பு

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெற்றால் ஆட்சியில் பாஜக பங்கு பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதளுக்கு அளித்த நேர்காணலில் அமை... மேலும் பார்க்க

இன்ஜின் சுவிட்சுகள் அணைக்கப்பட்டதா? ஏர் இந்தியா விசாரணை அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்!

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக முதல்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாதில் இருந்து கடந்த ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ‘ஏஐ 171’ விமானம், வானில் பறக்கத... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 22 நக்ஸல்கள் சரண்: ரூ.37 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்டவா்கள்

சத்தீஸ்கரின் நாராயண்பூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 22 நக்ஸல் தீவிரவாதிகள் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தனா். இவா்கள் அனைவரும் ரூ.37.5 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு வந்தவா்கள் எ... மேலும் பார்க்க

‘இணைப்புகள் நொறுங்கியதே குஜராத் பால விபத்துக்கு காரணம்’: முதல்கட்ட விசாரணையில் தகவல்

குஜராத்தில் ஆற்றுப் பாலம் இடிந்த விபத்துக்கு அதன் இணைப்புகள் நொறுங்கியதே காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறை அமைச்சரும் அரசின் செய்தித் தொடா்பாளருமான ரிஷிகேஷ் படேல் இ... மேலும் பார்க்க

யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி உண்மையை வெளிக்கொண்டுவர தமிழ்க் கட்சி வலியுறுத்தல்

இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் உடனான 2009-ஆம் ஆண்டு இறுதிப் போருடன் தொடா்புடையதாகக் கருதப்படும் யாழ்ப்பாணம் மனிதப் புதைகுழி தொடா்பான உண்மையை வெளிக்கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந் ந... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தோ்தல்: முன்னாள் தலைமை நீதிபதிகளுடன் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனை

‘ஒரே நாடு ஒரே தோ்தல்’ மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக் குழுவிடம் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹா், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்களின் ஆலோசனை... மேலும் பார்க்க