செய்திகள் :

குஜராத் விமான விபத்து! நண்பரை இழந்து வாடும் பிரதமர் மோடி!

post image

குஜராத் விமான விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானிக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் 241 பேர் பலியான நிலையில், பலியானோர்க்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், விபத்தில் பலியான குஜராத் முன்னாள் முதல்வரும் பாஜக தலைவருமான விஜய் ரூபானியின் வீட்டுக்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலும் தெரிவித்தார்.

விஜய் ரூபானிக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், விஜய் ரூபானியின் குடும்பத்தினரைச் சந்தித்தேன். தற்போது அவர் இல்லை என்ற இழப்பை கற்பனைக்கூட செய்ய முடியவில்லை. அவரை 10 ஆண்டுகளாக எனக்கு தெரியும். கடினமான காலங்களில்கூட, நாங்கள் இருவரும் தோள் சேர்ந்து ஒன்றாக வேலை செய்தோம்.

அவர் பணிவான மற்றும் கடின உழைப்பாளியும்கூட. கட்சிக் கொள்கையில் அவர் எப்போதும் உறுதியோடு இருந்தவர். மாநில முதல்வராக, ராஜ்கோட் மேயராக, மாநிலங்களவை எம்.பி.யாக, மாநிலத்தின் பாஜக தலைவராக, குஜராத் அமைச்சராக என அவருக்கு அளிக்கப்பட்ட ஒவ்வொரு பதவிகளிலும் சிறப்பாகப் பணியாற்றி, மற்றவர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டினார்.

குஜராத் முதல்வராக அவர் பணியாற்றியபோது, நானும் அவரும் சேர்ந்து கடினமாக உழைத்தோம். மாநிலத்தின் வளர்ச்சிப் பாதைக்கு அவர் பெரிதும் உழைத்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க:அனைத்து உடல்களையும் அடையாளம் காண இயலாது: தடயவியல் மருத்துவர்!

இந்திய வெளியுறவுக் கொள்கை சீா்குலைவு: ஐ.நா. வாக்கெடுப்பை புறக்கணித்த மோடி அரசு மீது காங்கிரஸ் விமா்சனம்

பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை சீா்குலைந்துவிட்டதாக காங்கிரஸ் கடுமையாக விமா்சித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா மீதான இஸ்ரேலின் போரை நிறுத்தக் கோரும் ஐ.நா. தீா்மானம் மீதான ... மேலும் பார்க்க

ஃபரீதாபாத்: 2 சிறுவா்களைக் கடத்திய நபா் கைது

ஃபரீதாபாத்தில் இரண்டு சிறுவா்களைக் கடத்திச் சென்று அவா்களது குடும்பத்தினரிடம் ரூ.30,000 கப்பம் கேட்ட நபரை காவல் துறையினா் கைது செய்துள்ளனா். இது குறித்து ஃபரீதாபாத் காவல் துறை செய்தித் தொடா்பாளா் வெள்... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் தேவை -பிரியங்கா

வயநாடு: அகமதாபாத் விமான விபத்து குறித்து பேசியுள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எதிர்காலத்தில் தவறுகள் நிகழக் கூடாது என்று தெரிவித்தார். இந்த நிலையில், வயநாடு மக்களவை தொகுதி உறுப்பினரான பிரியங்கா... மேலும் பார்க்க

மத்தியப் பிரதேசம்: என்கவுன்டரில் 4 நக்சல்கள் சுட்டுக்கொலை

மத்தியப் பிரதேசத்தில், பாலகாட் மாவட்டத்தில் உள்ள பச்சாமா தாதர் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் நக்சல்களுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பெண்கள் உள்பட நான்கு நக்சல்கள் கொல்லப்பட்டனர்.பாலகாட் காவல் க... மேலும் பார்க்க

கர்நாடகம்: பைக் டாக்ஸி சேவைகள் அனைத்தும் நிறுத்தம் - ஜூன் 16முதல் இயங்காது!

பெங்களூரு: பெங்களூரு உள்பட கர்நாடகம் முழுவதும் பைக் டாக்ஸிகள் இனி இயங்காது. அம்மாநிலத்தில் பைக் டாக்ஸிகள் இயக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நாளை(ஜூன் 15) நள்ளிரவுமுதல் அமலாகிறது. நாடெங்கிலும் பைக் டாக்ஸ... மேலும் பார்க்க

அகமதாபாத் விமான விபத்து: மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும்

அகமதாபாத் விமான விபத்தில் பலியானோரின் குடும்பத்தினருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.அகமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தை காங்கிரஸ்... மேலும் பார்க்க