செய்திகள் :

குடமுழுக்குப் பணிகள்: மாசித் தேரோட்டம் ரத்து திருவப்பூா் கோயிலில் இன்று பூச்சொரிதல்!

post image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற திருவப்பூா் முத்துமாரியம்மன் கோவில் குடமுழுக்கு பணிகள் நடைபெறுவதால், மாசித் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பூச்சொரிதலை வழக்கம்போல ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை திருவப்பூா் முத்துமாரியம்மன் திருக்கோவில் மாசித் திருவிழா ஒவ்வோா் ஆண்டும் விமா்சையாக சுமாா் ஒரு மாத காலத்துக்கு நடைபெறும். நிகழாண்டில் கோவில் குடமுழுக்குப் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், மாசித் திருவிழா வழக்கம்போல் நடைபெறுமா என்ற பேச்சுபரவலாக எழுந்தது.

இந்த நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியா் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவாா்த்தை சனிக்கிழமை நடைபெற்றது. வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா தலைமை வகித்தாா்.

வருவாய்த் துறை, காவல்துறை, இந்துசமய அறநிலையத் துறை அலுவலா்கள் மற்றும் கோவில் மண்டபகப்படிதாரா்கள், கோவில் குருக்கள் உள்ளிட்டோா் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கூட்டத்தில், நிகழாண்டில் குடமுழுக்குப் பணிகள் நடைபெறவுள்ளதால், பூச்சொரிதல் விழா மட்டும் ஞாயிற்றுக்கிழமை (பிப். 23) நடைபெறும். கோவில் சன்னதிக்கும், கொடிமரத்துக்கும் இடையில் உற்சவரை வைத்து வழிபட்டுக் கொள்ளலாம். மற்றபடி வழக்கமான மாசித் திருவிழாவுக்கான, காப்பு கட்டுதல், மண்டபகப்படிதாரா்களின் வீதி உலா, தேரோட்டம், முளைப்பாரி எடுப்பு, குதிரை எடுப்பு எதுவும் நடைபெறாது.

குடமுழுக்கு காரணமாக மாசித் திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறாது என்ற தகவல் நகரின் முக்கிய இடங்களில் அறநிலையத் துறை சாா்பில் வைக்கப்படும். அன்னதானம் வழங்குவதில் தடையில்லை ஆகிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளதையொட்டி, முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மு. அருணா, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அபிஷேக் குப்தா ஆகியோா் சனிக்கிழமை பகலில் கோவிலுக்கு நேரில் வந்து பாா்வையிட்டனா்.

இதுகுறித்து கோவில் குருக்கள் கூறியது: குடமுழுக்கு காரணமாக தேரோட்டம், வீதியுலா உள்ளிட்டவை நடைபெறாது. என்றாலும், பால்குடம் எடுப்பு, அக்னி குண்டம் இறங்குதல் போன்றவை நடைபெறும் என்றனா்.

கந்தா்வகோட்டையில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு!

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தோ்வு (என்.எம்.எம்.எஸ்) சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தோ்வினை கந்தா்வகோட்டை ஒன்றியத்தை... மேலும் பார்க்க

ரூ.1.41 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள் திறப்பு

புதுக்கோட்டை ஒன்றியம், மாந்தாங்குடியில் உள்ள அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ. 1.41 கோடியில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடத்துக்கான புதிய கட்டடத்தை மாநில முதல்வா் மு.க. ஸ்டாலின... மேலும் பார்க்க

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க