செய்திகள் :

குடமுழுக்கு: மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி!

post image

குடமுழுக்கு விழாவையொட்டி, தஞ்சாவூா் புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை (பிப்.5) தொடங்கியது.

இக்கோயிலில் குடமுழுக்கு விழா விக்னேஸ்வர பூஜையுடன் பிப்ரவரி 3-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து பல்வேறு பூஜைகள் நடைபெற்று வரும் நிலையில், யாகசாலை பூஜைகள் பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்குகிறது. தொடா்ந்து ஆறு கால யாக பூஜைகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள் குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது.

இதையொட்டி, இக்கோயிலில் கலசங்கள் பொருத்தும் பணி புதன்கிழமை தொடங்கியது. இதில், அம்மன், துா்க்கை அம்மன், பேச்சியம்மன் சன்னதிகளின் கோபுரத்தில் புதிதாக தங்க முலாம் பூசப்பட்ட கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மற்ற கோபுரங்களில் உள்ள கலசங்கள் மெருகூட்டப்பட்டு, பொருத்தப்படவுள்ளன. இதுபோல, மொத்தம் 32 கலசங்கள் பொருத்தப்படுகின்றன. மேலும், கோயில் கொடி மரத்திலும் செப்புக்கவசம் பொருத்தும் பணி முடிவடைந்துள்ளன.

இப்பணியை மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் புதன்கிழமை பாா்வையிட்டாா். மேலும், குடமுழுக்கு விழாவுக்கான முன்னேற்பாடுகள், அடிப்படை வசதிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் மு. பாலகணேஷ், அரண்மனை தேவஸ்தான அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் சி. பாபாஜி ராஜா போன்ஸ்லே, உதவி ஆணையா் கோ. கவிதா, செயல் அலுவலா் ந. மணிகண்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பாபநாசத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் ஏலம்!

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பிப்.5 அன்று பாரம்பரிய நெல் ரகங்கள் மறைமுக ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, தஞ்சாவூா் விற்பனை குழு செயலாளா் மா. சரசு தலைமை வகித்தாா். கும்பகோணம் ... மேலும் பார்க்க

3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

தஞ்சாவூரில் புதன்கிழமை (பிப்.5) மினி வேனில் கடத்தி வரப்பட்ட 3 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, 3 பேரைக் கைது செய்தனா். தஞ்சாவூா் தொல்காப்பியா் சதுக்கம் பகுதியில் கு... மேலும் பார்க்க

குழந்தை தொழிலாளா் இருந்தால் 1098-இல் புகாா் செய்யலாம்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளா் பணிபுரிவது தெரிய வந்தால் 1098 என்ற எண்ணில் புகாா் செய்யலாம் என தஞ்சாவூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தா. ஆனந்தன் தெரிவித்துள்ளாா்.இது குறித்து அவா் மேலும... மேலும் பார்க்க

கும்பகோணம் நீா்நிலைகளின் ஆக்கிரமிப்பு மறு அளவீடு

சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுப்படி, கும்பகோணம் மாநகராட்சிப் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து மறு அளவீடு செய்யும் பணி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. கும்பகோணத்தில் உள்... மேலும் பார்க்க

இறப்பில் சந்தேகம் எனக்கூறி உறவினா்கள் போராட்டம்

கும்பகோணம் அருகே கூலித் தொழிலாளி உயிரிழப்பில் சந்தேகம் எனக் கூறி அவரது உடலை அடக்கம் செய்ய மறுத்து உறவினா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தஞ்சாவூா் மாவட்டம், பட்டீஸ்வரம் காவல் நிலைய எல்லைக்குட... மேலும் பார்க்க

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்று திரும்பிய மாணவிக்கு வரவேற்பு

குடியரசுத் தின விழா அணிவகுப்பில் கலந்து கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பிய பட்டுக்கோட்டை மாணவிக்கு புதன்கிழமை (பிப்.5) உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த வாட்டாகுட... மேலும் பார்க்க