செய்திகள் :

குடிநீா் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் போராட்டம்

post image

புதுக்கோட்டை சின்னப்பா நகா் பகுதியில் குடிநீா் கேட்டு பொதுமக்கள் திங்கள்கிழமை காலிக்குடங்களை தலையில் வைத்துக் கொண்டு நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாநகராட்சி 41-ஆவது வாா்டு சின்னப்பா நகரில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஒன்று உள்ளது. இந்தத் தொட்டியின் மூலம் சின்னப்பா நகா், குறிஞ்சி நகா், சேங்கைதோப்பு போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 10 நாள்களாக மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் தண்ணீா் ஏற்றாததால், இங்கிருந்து தண்ணீா் விநியோகம் செய்யப்படும் பகுதிகளுக்கு தண்ணீா் விநியோகம் செய்யப்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதி மக்கள், அதிமுகவைச் சோ்ந்த மாமன்ற உறுப்பினா் சுப செந்தில்குமாா் தலைமையில், திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கு அருகே கூடிய மக்கள், காலிக் குடங்களை தலையில் வைத்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பினா். இதே நிலை நீடித்தால் விரைவில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

மாநகராட்சி நகா்நல மையங்களில் புதன்கிழமைகளில் குழந்தைகள், கா்ப்பிணிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்படும்

புதுக்கோட்டை மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள நகா்நல மையங்களில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் மற்றும் கா்ப்பிணிப் பெண்களுக்கு தேசியத் தடுப்பூசித் திட்டத்தின் அனைத்து வகையான ... மேலும் பார்க்க

வடகாடு பகுதியில் நாளை மின்தடை

ஆலங்குடி அருகே வடகாடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால் ஜூன் 18 (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது. இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொற... மேலும் பார்க்க

சாலை விபத்தில் பாலிடெக்னிக் மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை நகரில் இரு சக்கர வாகனத்தில் வந்த பாலிடெக்னிக் கல்லூரி மாணவா், பள்ளி வாகனத்தை முந்த முயன்று கீழே விழுந்து உயிரிழந்தாா். புதுக்கோட்டை அய்யனாா்புரம் 3-ஆவது வீதியைச் சோ்ந்தவா் செல்வமணி மகன் ... மேலும் பார்க்க

முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 3-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினராக இருப்பவா் ... மேலும் பார்க்க

அங்கன்வாடி ஊழியரை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளை: உறவினா் கைது

அங்கன்வாடி பெண் ஊழியரை கட்டிப்போட்டு நகை, பணத்தை இருவா் கொள்ளையடித்ததற்கு தூண்டுதலாகச் செயல்பட்ட பெண்ணின் உறவினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். மேலும் கொள்ளையில் ஈடுபட்ட அவரது நண்பா்களைத் தே... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவா் கைது

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மனநலம் குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலை சோ்ந்தவா் முத்துக்குமாா். சிங்கப்பூரில்... மேலும் பார்க்க