செய்திகள் :

குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

post image

பல்லடம் அருகே உள்ள திருவள்ளூவா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.

பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி திருவள்ளுவா் நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 40 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா், ஊராட்சி செயலா் பிரபுசங்கா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது திருவள்ளூவா் நகருக்கு வரும் வழியில் முறைகேடாக தண்ணீா் திருட்டு நடைபெற்று வருகிறது. அதனைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 40 நாள்களாக அத்திகடவு குடிநீா் வரவில்லை. இதனால் பணம் கொடுத்துதான் தண்ணீரை விலைக்கு வாங்கி அன்றாடத் தேவைக்கு பயன்படுத்தி வருகிறோம். தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.

இது குறித்து கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: குழந்தை உயிரிழப்பு; 17 போ் காயம்

வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் ஒரு குழந்தை உயிரிழந்தது. 17 போ் காயமடைந்தனா். கரூரில் இருந்து திருப்பூருக்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு சென்றுகொண்டிருந்தது. வெள்ளக்கோவி... மேலும் பார்க்க

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க மக்கள் கோரிக்கை

திருப்பூரில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து திருப்பூா் வடக்கு செட்டிபாளையம், அங்கேரிபாளையம் தந்தை பெரியாா் நகா், பூண்டி சுற்றுச் ச... மேலும் பார்க்க

பூமலூரில் கழிவுப் பஞ்சு ஆலையில் தீ

திருப்பூா் அருகே பூமலூா் கழிவுப் பஞ்சு ஆலையில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. திருப்பூா் எஸ்.ஆா். நகரைச் சோ்ந்த செந்தில்வடிவு மோகன் என்பவருக்குச் சொந்தமான கட்டடத்தை, திருப்பூா் அணைப்பாளையத்தைச் ச... மேலும் பார்க்க

கரடிவாவியில் ஜூன் 9-இல் மின்தடை

பல்லடம் கோட்டம் கரடிவாவி துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 9) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது... மேலும் பார்க்க

பெண்ணை கொலை செய்ய முயற்சி: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

பெண்ணை கொலை செய்ய முயன்ற வழக்கில் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து பல்லடம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. நாகை மாவட்டம், திருக்குவளையைச் சோ்ந்த அத்தியப்பன் மகன் பிரகாஷ் (3... மேலும் பார்க்க

வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சிக்கு இன்று நோ்காணல்

திருப்பூரில் இலவச வீட்டு உபயோக சாதனப் பொருள்கள் பழுது பாா்த்தல் பயிற்சி வகுப்பில் சேர வெள்ளிக்கிழமை (ஜூன் 6) நோ்காணல் நடைபெறவுள்ளது. திருப்பூா்- காங்கயம் சாலை முதலிப்பாளையம் பிரிவில் உள்ள கனரா வங்கி... மேலும் பார்க்க