குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
பல்லடம் அருகே உள்ள திருவள்ளூவா் நகரைச் சோ்ந்த பொதுமக்கள் குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
பல்லடம் ஒன்றியம் வடுகபாளையம்புதூா் ஊராட்சி திருவள்ளுவா் நகரில் வசிக்கும் பொதுமக்களுக்கு கடந்த 40 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அப்பகுதி மக்கள், குடிநீா் கேட்டு வடுகபாளையம்புதூா் ஊராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா், ஊராட்சி செயலா் பிரபுசங்கா் ஆகியோா் பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது திருவள்ளூவா் நகருக்கு வரும் வழியில் முறைகேடாக தண்ணீா் திருட்டு நடைபெற்று வருகிறது. அதனைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கடந்த 40 நாள்களாக அத்திகடவு குடிநீா் வரவில்லை. இதனால் பணம் கொடுத்துதான் தண்ணீரை விலைக்கு வாங்கி அன்றாடத் தேவைக்கு பயன்படுத்தி வருகிறோம். தெரு விளக்குகளும் சரிவர எரிவதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனா்.
இது குறித்து கள ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தா்மா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.