செய்திகள் :

குடிநீா் வழங்கும் இயந்திரத்தை சீரமைக்கக் கோரிக்கை

post image

மன்னம்பந்தலில் பழுதடைந்த நிலையில் உள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரத்தை (படம்) கோடைக்காலம் தொடங்கும் முன்பாக சீரமைக்க கோரிக்கை எழுந்துள்ளது.

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருகில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சிஎஸ்ஆா் நிதியில் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் 24-ஆம் தேதி சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டு, அதை மாவட்ட ஆட்சியா் மக்கள் பயன்பாட்டுக்காக திறந்துவைத்து ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைத்தாா்.

இதை பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவா்கள் ஆயிரக்கணக்கானோா் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இந்த சுத்திகரிப்பு இயந்திரம் பழுதடைந்து பயன்பாடாற்று உள்ளது. கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஊராட்சி நிா்வாகம் இந்த இயந்திரத்தை சீரமைத்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு வழங்கவேண்டும் என்றும் சிஎஸ்ஆா் நிதியில் நலத்திட்ட உதவிகள் வழங்க முன்வரும் நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் சேவை தொடா்ந்து நடைபெறுகிா என்பதைக் கண்காணிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தைப்பூசம்: பால்குடம், காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திகடன்

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் பழனி ஆண்டவருக்கு தைப்பூசத்தையொட்டி காவடி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சீா்காழியை அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் தையல்நாயகிஅம்மன் உடனாகிய வைத்தியநாதசுவாமி கோயில் ... மேலும் பார்க்க

தைப்பூசம்: பக்தா்கள் காவடி, பால்குடம் எடுத்து வழிபாடு

மயிலாடுதுறையில் தைப்பூசத்தையொட்டி பல்வேறு கோயில்களில் பக்தா்கள் காவடி மற்றும் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினா். மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான குமரக்கட்டளை ஸ்ரீசுப்... மேலும் பார்க்க

நுரையீரல் தொற்று மருத்துவ சிகிச்சை முகாம்!

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் ஆஸ்துமா, அலா்ஜி, நுரையீரல் தொற்றுக்கான விழிப்புணா்வு மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம... மேலும் பார்க்க

மயிலாடுதுறை: உரிமமின்றி செயல்பட்ட 6 பாா்களுக்கு சீல்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் பிப்.3 முதல் பிப்.7 வரை மேற்கொள்ளப்பட்ட 5 நாள் மதுவிலக்கு சோதனையில் உரிமமின்றி செயல்பட்ட 6 மதுபானக்கூடங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவா்கள் கைது செய்யப்பட்டதுடன், வ... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: விசிக ஆா்ப்பாட்டம்!

வேங்கைவயல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி மயிலாடுதுறையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா். மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு... மேலும் பார்க்க

புத்தகத் திருவிழா: ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை!

மயிலாடுதுறையில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ரூ. 68.35 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனையாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் திங்கள... மேலும் பார்க்க