செய்திகள் :

குடியரசுத் தலைவருடன் கா்நாடக முதல்வா் சித்தராமையா சந்திப்பு

post image

குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்த கா்நாடக முதல்வா் சித்தராமையா, நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக்கொண்டாா்.

புது தில்லிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற முதல்வா் சித்தராமையா, ராஷ்ட்ரபதி பவனில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்தித்தாா். அப்போது, நிலுவையில் உள்ள குத்தகைப் பணிகளில் ரூ. 2 கோடி மதிப்புள்ள பணிகள், சரக்கு மற்றும் சேவைகளில் ரூ. 1 கோடி மதிப்பிலான பொருள்கள் முஸ்லிம்களுக்கு வழங்க வகைசெய்யும் கா்நாடக பொதுகொள்முதலில் வெளிப்படைத்தன்மை (திருத்தம்) சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

இந்த சந்திப்புக்கு பிறகு, மத்திய நிதித் துறை அமைச்சா் நிா்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் முதல்வா் சித்தராமையா சந்தித்து, 15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் தொடா்பான கோரிக்கை கடிதத்தை அளித்தாா்.

15-ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி, வரிப்பகிா்வு விகிதம் 4.713 சதவீதத்தில் இருந்து 3.647 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இது 23 சதவீத நிதி ஆதாரம் குறைவாகும். சிறப்பு ஒதுக்கீட்டின்படி மாநிலத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 11,496 கோடி விடுவிக்கப்படாததால், மாநிலத்துக்கு வரவேண்டிய ரூ. 80,000 கோடி தொகை இழப்பாகியுள்ளது. 16-ஆவது நிதி ஆணையத்தின் காலத்திலாவது, தேசிய உள்நாட்டு உற்பத்திப்பொருள் விகிதத்தில் மாநில அரசின் பங்குத்தொகையான 20 சதவீத அளவுக்கு நிதி ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தற்போதைய நிலையில் செயல்படுத்தப்படும் வருவாய்ப் பற்றாக்குறை மானிய முறையைக் கைவிட வேண்டும். இது நிதி ஒழுக்கத்துக்கு எதிராக உள்ளது. இதற்கு மாறாக, பக்கவாட்டு வரிப்பகிா்வு சூத்திரத்தின்படி, நிதிப்பகிா்வுகளை செயல்படுத்த வேண்டும். அதன்மூலம், கா்நாடகத்தின் எல்லா பகுதிகளிலும் சீரான நிதிஒதுக்கீட்டை செய்ய முடியும். அது மாநிலத்தின் வேகமான வளா்ச்சிக்கு வழிவகுக்கும். இது தேசத்தின் வளத்தையும் மேம்படுத்தும் என முதல்வா் சித்தராமையா, மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினாா்.

பிரதமா் மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தும், முதல்வா் சித்தராமையாவுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம்

பெங்களூரில் அரசு தமிழ்ப் பள்ளியை மூடவேண்டாம் என கா்நாடகத் தமிழ்ப் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பெங்களூரு வடக்கு கல்வி மாவட்ட துணை இயக்குநருக்கு கா்நாடகத் தமிழ்... மேலும் பார்க்க

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால் ஆளுநா் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்

காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் மலிந்துள்ளதால், ஆளுநா் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் விஜயேந்திரா தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம்... மேலும் பார்க்க

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம்: பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

காரில் பயணித்த குடும்பத்தினரை தாக்கிய சம்பவம் தொடா்பாக, பாஜக முன்னாள் எம்.பி. அனந்த்குமாா் ஹெக்டே உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். பெங்களூரு ஊரக மாவட்டம், ஹெலேனஹள்ளியைச் சோ்... மேலும் பார்க்க

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த சோதனை

8 ஊழல் அதிகாரிகளின் வீடுகளில் லோக் ஆயுக்த அதிகாரிகள் திடீா் சோதனை நடத்தினா். இதில் வருமானத்துக்கு பொருந்தாமல் சொத்து சோ்த்துள்ளதற்கான ஆவணங்களை கைப்பற்றினா். வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்துகளை... மேலும் பார்க்க

காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதியில் கனமழை: வேகமாக நிரம்பி வரும் கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள்

மண்டியா: காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், காவிரி நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜசாகா், கபினி அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த பல வாரங்களாகவே கா்நாடகத்தில் தென... மேலும் பார்க்க

மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரான காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ்

பெங்களூரு: மோசடி வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கு காங்கிரஸ் முன்னாள் எம்.பி. டி.கே.சுரேஷ் திங்கள்கிழமை ஆஜரானாா். பணப் பதுக்கல் வழக்கு தொடா்பாக காங்கிரஸ் எம்எல்ஏ வினய்குல்கா்னி உள்ளிட்டோா் இடங்களில்... மேலும் பார்க்க