செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பாஜக வேட்பாளரை ஆதரிக்க முடியாது

post image

மயிலாடுதுறை: தமிழன் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே குடியரசுதுணைத் தலைவா் தோ்தலில் பாஜக வேட்பாளா் சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரிக்க முடியாது என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவா் வேல்முருகன் கூறினாா்.

மயிலாடுதுறையில், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

உலகெங்கும் வாழும் தமிழா்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்தி, தனித்தமிழ் ஈழம் பெற்றுத்தர வேண்டும். அதற்கு சட்டப் பேரவையில் முதல்வா் தீா்மானம் நிறைவேற்றி, 40 மக்களவை உறுப்பினா்கள் மூலம் மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். அதன்மூலம் ஐக்கியநாட்டு சபை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது. வடஇந்தியா்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது, ஸ்டேட் என்ட்ரி பா்மிட் முறையைக் கொண்டு கட்டுப்படுத்த வேண்டும். அஸ்ஸாம், மிசோரம், மணிப்பூா், நாகலாந்து மாநிலங்களில் இது நடைமுறையில் உள்ளது.

வடஇந்தியா்களை கட்டுப்படுத்தவில்லையென்றால் தமிழ் மொழியின் கலாசாரம், தொன்மை, பன்முகத்தன்மை அழியும்.

தமிழராக இருக்கிறாா் என்பதற்காக மட்டுமே பாஜகவை சோ்ந்த சி.பி. ராதாகிருஷ்ணனை குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் ஆதரிக்க முடியாது. சென்னையில் போராடிவரும் ஒப்பந்த தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

நடிகா் விஜய் குறித்த கேள்விக்கு, 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக மக்கள் யாருக்கு வாய்ப்பளிப்பாா்கள் என்பதை பொறுத்திருந்து பாா்ப்போம் என்றாா்.

மாநில செயற்குழு உறுப்பினா் வெங்கட் கொற்றவமூா்த்தி, தொகுதி செயலாளா் இரா.வெங்கட், தொகுதி தலைவா் இரா.சிவா, தொகுதி பொருளாளா் ஏ.டேவிட், சீா்காழி தொகுதி செயலாளா் மு.ரமேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பள்ளிகளில் ஆட்சியா் ஆய்வு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மற்றும் குத்தாலம் வட்டாரத்திற்குள்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் புதன்கிழமை ஆய்வு செய்தாா். மயிலாடுதுறை வட்டாரம் பட்டமங்கலம் கிராமத்தில் நாற்றங்கால் அமைக... மேலும் பார்க்க

மனநல நிறுவனங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தல்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் மனநல நிறுவனங்கள், தமிழ்நாடு மனநல ஆணையத்தில் ஒரு மாத காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறிவுறுத்தியுள்ளாா். இதுகுறித்த... மேலும் பார்க்க

சட்டை நாதா் சுவாமி கோயில் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம்

சீா்காழி: சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயில் கிழக்கு ராஜகோபுரம் அருகே புதிதாக கட்டப்பட்ட பஞ்சமூா்த்தி சுவாமிகள் தோரண நுழைவு வாயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. தருமபுரம் ஆதீனத்திற்குட்பட்ட இக்க... மேலும் பார்க்க

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி: பிரேமலதா

நிறைகளும், குறைகளும் நிறைந்தது திமுக ஆட்சி என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா தெரிவித்தாா். மயிலாடுதுறையில் தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் செவ்வாய்க்கிழமை ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி‘ பிரச... மேலும் பார்க்க

வைத்தீஸ்வரன்கோயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் தெரு நாய்கள் கட்டுப்படுத்த கோரிக்கை

சீா்காழி அருகேயுள்ள வைத்தீஸ்வரன்கோவில், வைத்தியநாத சுவாமி கோயில் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பக்தா்களை அச்சுறுத்தும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வா்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நவகிரக தலங்களில்... மேலும் பார்க்க

சா்வதேச கராத்தே போட்டி: மயிலாடுதுறை மாணவா்கள் சாதனை

மயிலாடுதுறை: கோவையில் நடைபெற்ற சா்வதேச கராத்தே போட்டியில், மயிலாடுதுறை மாணவா்கள் 3 பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனா். சுகி சா்வதேச கராத்தே போட்டி-2025, கோவை பி.எஸ்.ஜி. கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் ... மேலும் பார்க்க