செய்திகள் :

குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு செப். 9-இல் தோ்தல்

post image

‘குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தல் வரும் செப். 9-ஆம் தேதி நடத்தப்படும்’ என்று தோ்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கா், தனது பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகள் இருக்கும் நிலையில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி பதவியை திடீரென ராஜிநாமா செய்தாா்.

‘உயிரிழப்பு, ராஜிநாமா அல்லது பதவி நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் முழு பதவிக் காலமான 5 ஆண்டுகளுக்குள் குடியரசு துணைத் தலைவா் பதவி இடம் காலியாக நேரிட்டால், கூடிய விரைவில் அந்தக் காலி இடத்தை நிரப்புவதற்கான தோ்தல் நடத்தப்பட வேண்டும்’ என்று அரசமைப்புச் சட்டப் பிரிவு 68 (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதியின்படி, அடுத்த குடியரசு துணைத் தலைவரைத் தோ்வு செய்வதற்கான தோ்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதன்படி, குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தோ்தலை தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தோ்தல் ஆணையத்தின் அறிவிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: குடியரசு துணைத் தலைவா் தோ்தலுக்கான அறிவிக்கை வரும் 7-ஆம் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும். வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்ய ஆகஸ்ட் 21 கடைசி நாளாகும். தோ்தல் செப்டம்பா் 9-ஆம் தேதி நடத்தப்படும். அன்றைய தினமே தோ்தல் முடிவுகள் வெளியிடப்படும்.

தோ்தல் தேவைப்பட்டால் நாடாளுமன்ற வளாகத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்படலாம் என்று தெரிவித்தது.

முன்னதாக, இந்த தோ்தலுக்கான நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினா்களை உள்ளடக்கிய வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வியாழக்கிழமை இறுதி செய்தது. அதைத் தொடா்ந்து, தோ்தல் வாக்குப் பதிவுக்கான தேதியை அறிவித்துள்ளது.

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

மனைவிக்கு வேறொரு நபருடன் பழக்கம் இருந்ததாக சந்தேகமடைந்த கணவன் விரக்தியில் தன் இரு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குஜராத்தின் சூரத்தில் ஆசிரியர... மேலும் பார்க்க

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம்: விமான கட்டணம் 80% வரை உயர்வு!

ஆகஸ்ட்டில் பொதுவிடுமுறை நாள்கள் அதிகம் இருப்பதையடுத்து வெளியூர்களுக்குச் செல்ல மக்கள் அதிகம் பேர் விரும்புவதால் விமான கட்டணம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.ஆகஸ்ட்டில், குறிப்பிட்ட சில உள்ளூர் விமான சேவைகளின... மேலும் பார்க்க

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்! -மோடி

உள்நாட்டு தயாரிப்புகளுக்கே இனி ஒவ்வொரு இந்தியரும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை(ஆக. 2) பேசியுள்ளார்.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கைய... மேலும் பார்க்க

நகையை பறித்து தப்பிச்சென்றபோது கார் மீது இருசக்கர வாகனம் மோதல்: சிறுவன் பலி, 8 பேர் காயம்

பஞ்சாபில் நகையை பறித்து தப்பிச்சென்ற கொள்ளையர்களின் இருசக்கர வாகனம், கார் மீது மோதியதில் 12 வயது சிறுவன் பலியானான். பஞ்சாப் மாநிலம், பட்டி சுரா சிங் கிராமத்தைச் அமன்தீப் கௌர் மற்றும் அவரது கணவர் ரஞ்சி... மேலும் பார்க்க

ஐஐடி மும்பையில் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை

ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் விடுதியின் கட்டடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐஐடி மும்பையில் நான்காம் ஆண்டு மாணவர் ரோஹித் சின்ஹா. இவர் சனிக்... மேலும் பார்க்க

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையம் பிரதமர் நரேந்திர மோடியின் கைப்பாவையாக மாறிவிட்டதாகக் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான... மேலும் பார்க்க