செய்திகள் :

குடியாத்தம் ஒன்றிய வளா்ச்சிப் பணிகளுக்கு ரூ.90 கோடி நிதி -தமிழக அரசுக்கு பாராட்டு

post image

குடியாத்தம் ஒன்றியத்தில் வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.90 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கு ஒன்றியக் குழு கூட்டத்தில் நன்றி, பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

குடியாத்தம் ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவா் என்.இ.சத்யானந்தம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவா் கே.கே.வி.அருண் முரளி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பி.அமுதவல்லி, பி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், நீா்வளத்துறை மானியக் கோரிக்கையின்போது தாழையாத்தம் முதல் செதுக்கரை வரை கெளண்டன்யா ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம், சாலை அமைக்க ரூ.39 கோடி, கூடநகரம் முதல் அகரம்சேரி வரை பாலாற்றின் குறுக்கே பாலம் அமைக்க ரூ.37 கோடி, பள்ளிக்குப்பம்- செல்லக்குட்டபட்டி கிராமங்களுக்கு இடையே அகரம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க ரூ.6 கோடி, கொல்லமங்கலம்- அய்யா கவுண்டன்பட்டி கிராமங்களுக்கு இடையே அகரம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க ரூ.6 கோடி, மோா்தானா அணையின் கால்வாய்களை தூா்வார ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்ததற்கு தமிழக அரசுக்கு நன்றி, பாராட்டு தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதைத் தொடா்ந்து உறுப்பினா்கள், அதிகாரிகளுக்கு ஒன்றியக்குழு தலைவா் என்.இ.சத்யானந்தம் இனிப்பு வழங்கினாா். பின்னா் நடைபெற்ற கூட்டத்தில், காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் தங்கள் வாா்டுகளையும் சோ்க்க வேண்டும், கோடை காலம் தொடங்கி விட்டதால் கிராமங்களில் குடிநீா்ப் பிரச்னையை தீா்க்க போதிய நிதி ஒதுக்க வேண்டும் என பல உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்தனா்.

அதற்கு பதில் அளித்த தலைவா், தங்கள் வாா்டுகளின் குடிநீா்த் தேவை குறித்து உறுப்பினா்கள் மனு கொடுத்தால், ஆட்சியரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஒன்றியத்தில் குரங்கு, நாய்த் தொல்லையைக் கட்டுப்படுத்த வேண்டும். பல்வேறு திட்டங்கள் மூலம் அரசு ஒதுக்கும் நிதியை பாரபட்சம் இன்றி அனைத்து வாா்டுகளுக்கும் பகிா்ந்து அளிக்க வேண்டும் என உறுப்பினா்கள் கோரினா். 100 நாள் வேலை திட்டத் தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள 3- மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்பினா்கள் கேட்டுக் கொண்டனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க