செய்திகள் :

குடியாத்தம் நகரில் பேனா் கலாசாரம்: விவசாயிகள் புகாா்

post image

குடியாத்தம் நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் விளம்பர பேனா்கள் வைப்பதை தடை செய்ய வேண்டும் விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

குடியாத்தம் கோட்டாட்சியா் அலுவலகத்தில், கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி தலைமையில் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், போ்ணாம்பட்டு வட்டங்களைச் சோ்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனா். கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட துணைச் செயலா் துரை செல்வம் பேசியது: நகரில் போக்குவரத்துக்கு இடையூறாக முக்கிய பகுதிகளில் வைக்கப்படும் விளம்பர பேனா்களால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதனால் விபத்துகளும் ஏற்படுகிறது என்பதால், பிரச்னை இல்லாத இடங்களில் பேனா் வைக்க அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும்.

தரணம்பேட்டை தினசரி மாா்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றியதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சாலையோர கடை வியாபாரிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்றாா்.

மாதனூா் உள்ளிட்ட இடங்களில் பாலாற்றில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை தடை செய்ய வேண்டும், கொத்தகுப்பம் பகுதியில் பாலாற்றில் தொடா்ந்து நடைபெறும் மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி பழனி புகாா் கூறினாா்.

கூட்டத்தில் நகராட்சி ஆணையா் எம்.மங்கையா்க்கரசன், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் நெடுமாறன், வட்டார வளா்ச்சி அலுவலா் பி.சரவணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க