செய்திகள் :

குடும்பத்திற்கு கொலை மிரட்டல்கள்: மன்னிப்பு கேட்ட அனுராக் காஷ்யப்!

post image

புலே திரைப்படத்திற்கு ஆதரவாக பேசிய தனக்கும் தனது குடும்பத்திற்கும் கொலை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக இயக்குநர் அனுராக் காஷ்யப் கூறியுள்ளார்.

சமூக சீர்திருத்தவாதி ஜோதிராவ், சாவித்ரிபாய் புலேவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து புலே திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் மத்திய தணிக்கைக் குழு வாரியம் சில காட்சிகளை மாற்றும்படி வலியுறுத்தியதாலும் பிராமணர் சமூகத்தினர் சிலர் இந்தப் படம் எங்கள் சமூகத்தை தவறாக சித்தரிப்பதாகக் கூறியும் பேசினார்கள். அதற்கு எதிராக அனுராக் காஷ்யப் பேசினார்.

அதில், “பிராமணர்கள் புலே படத்தை ஏன் எதிர்க்கிறார்கள்.? ஜாதியை ஒழித்துவிட்டதாகச் சொல்கிறீர்களே, சாதிகளே இல்லையென்றால் நீங்கள் எப்படி பிராமணர்கள் ஆவிர்கள்? நீங்கள் யார்? ஏன் படத்தை எதிர்க்கிறீர்கள்? சாதிகளே இல்லையெனில் ஏன் சாவித்ரிபாய், ஜோதிராவ் புலே போராடினார்கள்?” என காட்டமாக பேசியது சர்ச்சையானது.

தவறாகப் பேசிய அனுராக் காஷ்யப், தொடரும் சர்ச்சைகள்

இதனைத் தொடர்ந்து அனுராக் காஷ்யப் பதிவிட்ட இன்ஸ்டா பதிவில் ஒருவரின் கருத்துக்கு பதிலளிக்கும்போது,“பிராமணர்கள் மீது மூத்திரம் அடிப்பேன். எதாவது பிரச்னையா?”எனக் கேட்பார்.

இதற்காக அனுராக் காஷ்யப் குடும்பத்தினர் மீது கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன.

இதனையடுத்து அனுராக் காஷ்யப் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார். ஆனால், தனது பதிவுக்காக மன்னிப்பு கேட்க முடியாது என்றும் தவறாக பேசிய அந்த ஒற்றை வரிக்கு மட்டும் மன்னிப்பு கேட்கிறேன் எனவும்

கூறியுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறேன், ஆனால்...

இது குறித்து இன்ஸ்டா பக்கத்தில் அனுராக் காஷ்யப் கூறியதாவது:

இது எனது மன்னிப்பு. ஆனால், இது எனது பதிவுக்காக அல்ல. முக்கியமானவற்றை விட்டுவிட்டு ஒரு வரியை எடுத்துக்கொண்டு வெறுப்பைப் பரப்புகிறார்கள்.

நான் பேசியதிலிருந்து பின் வாங்க மாட்டேன். என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுங்கள். எனது குடும்பம் எதுவுமே சொல்லவில்லை. உங்களுக்கு மன்னிப்பு வேண்டுமானால் இதோ இங்கிருக்கிறது.

இந்துக்களில் முக்கியமானவர்களிடமிருந்து எனது மகள், குடும்பம், நண்பர்கள், உடன் வேலை செய்தவர்களுக்கு கொலை மிரட்டல், வன்கொடுமை போன்ற மிரட்டல்கள் வருவது சரியில்லை.

நீங்கள் எழுதுவதற்கு முன்பாக அது என்ன நோக்கத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

கார் பந்தயத்தில் அஜித் குமார் புதிய சாதனை!

பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமாரின் அணி புதிய சாதனை படைத்துள்ளது.சமீப காலமாக கார் பந்தயத்தில் தீவிர கவனம் செலுத்திவரும் அஜித் குமாருக்கு குட் பேட் அக்லி வெற்றியைத் தொடர்ந்து ... மேலும் பார்க்க

ஜெர்மனியில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய இங்கிலாந்து வீரர் ஹாரி கேன்!

ஜெர்மனியில் புகழ்பெற்ற புன்டெஸ்லிகா கால்பந்து தொடரில் ஹாரி கேன் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.ஜெர்மனி ஜெயண்ட்ஸ் எனப்படும் பெயர்ன் மியூனிக் அணிக்காக விளையாடும் இங்கிலாந்த்தைச் சேர்ந்த ஹாரி கேன் போட்ட... மேலும் பார்க்க

மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை..! கொலம்பஸை வீழத்திய இன்டர் மியாமி!

அமெரிக்காவில் ஓஹியோவின் கிளீவ்லேண்டில் உள்ள ஹண்டிங்டன் பேங்க் ஃபீல்ட் திடலில் இன்டர் மியாமி அணியும் கொலம்பஸ் அணியும் மோதின. இந்தப் போட்டியில் இண்டர் மியாமி அணியின் இளம் வீரர் பெஞ்சமின் க்ரெமாச்சி 30ஆவ... மேலும் பார்க்க

புதிய தொடக்கம்.... அமீர் - பாவனி திருமணம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களான அமீர் - பாவனி ஜோடிக்கு இன்று (ஏப். 20) திருமணம் நடைபெற்றது. நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்றனர். இது குறித்த படங்களை அமீர... மேலும் பார்க்க

இக்லெசியாஸின் ஹாட்ரிக் கோல் வீண்: ரபீனியாவின் அசத்தலால் பார்சிலோனா த்ரில் வெற்றி!

லா லீகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி 4-3 என த்ரில் வெற்றி பெற்றது. பார்சிலோனா அணி லா லீகா தொடரில் தனது 32-ஆவது போட்டியில் செல்டா டி விகோ அணியுடன் மோதியது. இந்தப் போட்டியில் 15,52,62ஆவது நிமிஷங்களி... மேலும் பார்க்க

தமன்னாவின் ஒடேலா 2 தோல்வியா? வசூல் எவ்வளவு?

நடிகை தமன்னா நடித்துள்ள ஒடேலா 2 படத்தின் வசூல் விவரத்தினை படக்குழு பகிர்ந்துள்ளது. விஜய், அஜித், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா நட... மேலும் பார்க்க