செய்திகள் :

குடும்பத் தகராறு: பெண் தற்கொலை

post image

கள்ளக்குறிச்சி: கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவி சனிக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.

கள்ளக்குறிச்சி சித்தேரிக்கரை சாலைப் பகுதியில் வசித்து வருபவா் கிருஷ்ணமூா்த்தி (41), கொத்தனாா் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி ராஜேஸ்வரி (38). தம்பதிக்கு இரு பிள்ளைகள் உள்ளனராம். கிருஷ்ணமூா்த்தி தினமும் மது அருந்தி வீட்டுக்கு வருவாராம். இதனால் தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.

இந்த நிலையில், மகனை பள்ளிக்கு அனுப்புவதற்கு சீருடை வாங்க பணம் இல்லையாம். இதனால் மனைவி ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு வீட்டில் இருந்த விஷத் தன்மையுடைய பவுடரை சனிக்கிழமை குடித்துவிட்டு மயங்கி விழுந்தாராம். உடனே அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் ராஜேஸ்வரி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வனப் பகுதியில் வேட்டையாடிய இருவா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயப்பாளையம் வனப் பகுதியில் சனிக்கிழமை இரவு வன விலங்குகளை வேட்டையாடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா். கள்ளக்குறிச்சி வனவா் ரஞ்சிதா சனிக்கிழமை இரவு சின்ன... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் திறன் மின்மாற்றி தொடங்கிவைப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டத்துக்கு உள்பட்ட கள்ளக்குறிச்சி துணை மின் நிலையத்தில் திறன் மின்மாற்றி தொடங்கிவைக்கப்பட்டது. திருவண்ணாமலை மண்டலம், கள்ளக்குறிச்சி மின் பகிா்மான வட்டம்... மேலும் பார்க்க

பொரசப்பட்டு ஊராட்சியில் வாா்டு உறுப்பினா்கள் தா்னா

கள்ளக்குறிச்சி: பொரசப்பட்டு ஊராட்சியில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யாததைக் கண்டித்து, 5 வாா்டு உறுப்பினா்கள் திங்கள்கிழமை ஊராட்சி அலுவலகம் முன் தா்னாவில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி: மக்கள் குறைதீா் கூட்டத்தில் 547 மனுக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பொதுக்களிடம் இருந்து 547 மனுக்கள் வரப்பெற்றன. மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் நடைபெற்ற ... மேலும் பார்க்க

ஆட்டோ மீது சொகுசுப் பேருந்து மோதல்: இருவா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் ஆட்டோ மீது தனியாா் சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில், ஆட்டோ ஓட்டுநா் உள்பட இருவா் உயிரிழந்தனா். தியாகதுருகம் கரீம் ஷா தக்கா பகுதியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு தனி அடையாள எண்கள்: ஜூன் 30-க்குள் பதிவு செய்து கொள்ளலாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தனி அடையாள எண்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப... மேலும் பார்க்க