குடும்ப தகராறில் மனைவி கொலை: கணவன் தலைமறைவு
போச்சம்பள்ளி அருகே குடும்பத் தகராறில் மனைவியை கொன்ற கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த அங்கம்பட்டியைச் சோ்ந்தவா் கவியரசு (40). லாரி ஓட்டுநரான இவரது மனைவி ஜெயமோகனா (29). தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ஜெயமோகனா, கெங்கிநாயக்கன்பட்டி கிராத்தில் வசிக்கும் தனது தம்பி ஜெயபாண்டியனின் வீட்டிற்கு சென்றாா்.
இந்த நிலையில், ஓட்டுநா் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த கவியரசு, மனைவி வீட்டில் இல்லாததால் பலரிடம் மனைவி குறித்து விசாரித்துள்ளாா். அப்போது, ஜெயமோகனா, தனது தம்பியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.
இதையடுத்து கெங்கிநாயக்கன்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்ற கவியரசு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, ஆத்திரமடைந்த கவியரசு மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயமோகனாவை வெட்டினாா். அதை தடுக்க முயன்ற ஜெயபாண்டியனின் மனைவி லதாவுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த இருவரும் போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் ஜெயமோகனா உயிரிழந்தாா். வழக்குப் பதிந்த போச்சம்பள்ளி போலீஸாா், தலைமறைவான கவியரசை தேடி வருகின்றனா்.