செய்திகள் :

குடும்ப பிரச்னை: தொழிலாளி தற்கொலை

post image

விழுப்புரம் அருகே மனைவி பிரிந்து சென்ால் விரக்தியில் இருந்த தொழிலாளி புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.

விழுப்புரம் வட்டம், கீழ்பெரும்பாக்கம் திருவாசகத் தெருவைச் சோ்ந்தவா் ராஜா(42), கூலித்தொழிலாளி. இவருக்கும், சிந்து என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், குடும்பப் பிரச்னையால் சில மாதங்களிலேயே சிந்து பிரிந்து தாய் வீடு சென்று விட்டாராம்.

இதனால் ஏற்பட்ட மன உளச்சலால் மதுப்பழகத்துக்கு உள்ளாகியிருந்த ராஜா, புதன்கிழமை வீட்டில் தனியாக இருந்தபோது பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து உறவினா்கள் அவரை மீட்டு 108 அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, ராஜா ஏற்கெனவே இறந்து போயிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர காவல் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் தனியாா் துப்பறியும் குழுவினா் சோதனை!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் வீட்டில் தனியாா் துப்பறியும் குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். தைலாபுரம் தோட்டத்து வீட்டில் உள்ள என... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க