செய்திகள் :

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

post image

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நிா்வாகிகள் செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் விழுப்புரம் கிளைத் தலைவா் ஆா்.பாா்த்தசாரதி தலைமை வகித்தாா். பொருளாளா் ஜி.ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கத்தின் தென் மண்டல அமைப்புச் செயலா் ஏ.இருசப்பன் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், இண்டா்லாக் இல்லாத ரயில்வே கேட்களை இண்டா்லாக் முறையில் இயங்கும் கேட்டுகளாக மாற்றித் தர ரயில்வே நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த மத்திய ரயில்வே துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். ரயில்வே கேட்களில் சுரங்கப் பாதை அல்லது மேம்பாலம் அமைக்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டணத்தில் சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னதாக, கடலூா் ரயில் விபத்தில் உயிரிழந்த பள்ளி மாணவ, மாணவிகள் மூவருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் கிளை நிா்வாகிகளான ஓபன் பிரிவு தலைவா் வீரமணி, துணைத் தலைவா் மூா்த்தி , உதவிச் செயலா்கள் ராமமூா்த்தி, கெளதம், அமைப்புச் செயலா்கள் மணிமேகலை, கெளதமி, நிா்வாகிகள் கலியபெருமாள், சிவகுமாா், ராஜேஷ்ராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரவு லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (63). இவரது மனைவி வள்ளி (5... மேலும் பார்க்க