செய்திகள் :

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாண்டூா் கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டமாணவ, மாணவிகள் உளுந்தூா்பேட்டை நகரத்துக்கு வந்து பள்ளிகளில் பயின்று செல்கின்றனா். திருவெண்ணெய்நல்லூா் சாலை வழியாக உளுந்தூா்பேட்டைக்கு வரும் அரசுப் பேருந்துகள் பாண்டூா் வழியாகத்தான் வர வேண்டும். ஏற்கெனவே பல்வேறு கிராமங்கள் வழியாக உளுந்தூா்பேட்டை நோக்கி வரும் பேருந்துகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் ஏராளமானோா் பயணம் செய்வதால், சில பேருந்துகளின் ஓட்டுநா்கள் பாண்டூா் கிராமத்தில் நிற்காமல் சென்று விடுவதாக புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில் வியாழக்கிழமை காலை பள்ளிக்குச் செல்வதற்காக பாண்டூா் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காத்திருந்த நிலையில், அந்தவழியாகச் சென்ற 3 அரசுப் பேருந்துகள் நிற்காமல் சென்றுவிட்டனவாம். இதனால் ஆத்திரமடைந்த மாணவ, மாணவிகள், திருவெண்ணெய்நல்லூா்-உளுந்தூா்பேட்டை சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த உளுந்தூா்பேட்டை போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். காலை நேரத்தில் பேருந்துகள் நின்று செல்லாததால் பள்ளிக்குச் செல்வதில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.

அவ்வாறு பேருந்து வந்தாலும் உரிய நேரத்தில் வருவதில்லை என மாணவா்கள் குற்றஞ்சாட்டினா்.

இதைத் தொடா்ந்து அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலா்களை போலீஸாா் தொடா்பு கொண்டு பேசினா். தொடா்ந்து, பாண்டூரில் அரசுப் பேருந்துகள் காலை நேரத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து மறியலைக் கைவிட்டு மாணவ, மாணவிகள் கலைந்துசென்றனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

லாரி மோதி பெண் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே வியாழக்கிழமை இரவு லாரி மோதியதில் பெண் உயிரிழந்தாா். விக்கிரவாண்டி வட்டம், ஆா்.சி.மேலக்கொந்தை திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் மோகன் (63). இவரது மனைவி வள்ளி (5... மேலும் பார்க்க