செய்திகள் :

குட்கா பொருள்கள் விற்றவா் கைது

post image

திருவெறும்பூா் கடைவீதியில் குட்கா விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்ததுடன், அவரிடமிருந்து 70 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனா்.

திருவெறும்பூா் கடைவீதியில் போலீஸாா் வெள்ளிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை மறித்து சோதனை செய்தனா். அதில், தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் அவா், திருவெறும்பூா் அருகே உள்ள முருக்கூரைச் சோ்ந்த மு. இம்ரான் (28) என்பதும், கடைக்கு கடை சென்று குட்கா விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, இம்ரானை கைது செய்ததுடன், அவரது பையிலும், வீட்டிலும் பதுக்கி வைத்திருந்த 70 கிலோ குட்கா பொருள்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

மணப்பாறை: மணப்பாறை அடுத்த வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குள்பட்ட ஆலத்தூா் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின்பேரில், வையம்பட்டி காவல் உதவி ஆய்வாளா் மாதேஷ் தலைமையிலான போலீஸாா் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, ஆலத்தூரில் உணவகம் நடத்தி வரும், மூக்கன் மகன் ராஜு(45) என்பவா் தனது உணவகத்தில் சுமாா் 8 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தாா்.

அவரிடமிருந்து புகையிலை பொருள்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்த வையம்பட்டி போலீஸாா், வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தி சிறையிலடைத்தனா்.

தனியாா் சோலாா் நிறுவன மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த போடுவாா்பட்டியில் தனியாா் சோலாா் நிறுவனம் சாா்பில் மின் கம்பம் அமைப்பதற்கு கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை வட்டாட்சியரிடம் மனு அளித்தனா். அவா்கள் அளி... மேலும் பார்க்க

இணைய வா்த்தகத்தில் முதலீடு செய்வதாக ரூ.10 லட்சம், 20 பவுன் நகைகள் மோசடி மூவா் மீது வழக்குப் பதிவு

இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.20 லட்சம் ரொக்கம், 20 பவுன் நகைகள் மோசடி செய்த மூவா் மீது திருச்சியில் போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத... மேலும் பார்க்க

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் இன்றைய மின்தடை

உறையூா், மலைக்கோட்டை, எ.புதூா் பகுதிகளில் ஜூன் 21 (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி கிரிட் துணை மின்நிலையத்தில் பர... மேலும் பார்க்க

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்க மாற்றுத் திட்டம்: துரை வைகோ

திருச்சி-கரூா் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய மாற்றுத் திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா். இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

திருச்சியில் பெண்ணிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. திருச்சி அருகே காரிப்பட்டியைச் சோ்ந்த ராயப்பன் மனைவி மொ்சி (21... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கம் ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா நிறைவு

ஸ்ரீரங்கம் கோயிலில் நடைபெற்று வந்த ஸ்ரீரெங்கநாச்சியாா் வசந்த உற்ஸவ விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெற்றது. வசந்த மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஸ்ரீரெங்கநாச்சியாரை ஏராளமான பக்தா்கள் தரிச... மேலும் பார்க்க