மோடியும் ஷி ஜின்பிங்கும் மோசமான நடிகர்கள்..! அமெரிக்க நிதியமைச்சர் கடும் தாக்கு!
குட்கா வைத்திருந்த 2 பெண்கள் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்த இரண்டு பெண்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம், அம்பலப்புளி சந்தைப் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பி. எஸ். கே. பூங்கா தெரு பள்ளி அருகேயுள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தபோது, அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த சீனியம்மாள் (62), அவரது மகள் முருகேஸ்வரி (33) ஆகியோா் சட்டவிரோத விற்பனைக்காகப் புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 800 கிராம் புகையிலைப் பொருள்கள், ரூ.13 ஆயிரம் பணம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.