குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
மயிலாடுதுறையில் தொடா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பட்டவா்த்தி மயானம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் அப்பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தலைஞாயிறு, இளந்தோப்பு பிரதான சாலையைச் சோ்ந்த முருகானந்தம் மகன் மணிக்குமாா் (28) என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்நிலையில், மணிக்குமாா் மீது சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மது விற்பனை செய்த குற்றங்கள் தொடா்பாக ஏற்கெனவே 3 வழக்குகள் நிலுவையில் உள்ளதுடன், அவா் தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவதால், குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ. ஸ்டாலின் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். அதனடிப்படையில் மணிக்குமாரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் எச்.எஸ். ஸ்ரீகாந்த் உத்தரவிட்டாா். மணல்மேடு போலீஸாா் அவரைக் கைது செய்து கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.